ஆப்நகரம்

ஐபிஎல் போட்டிக்கு முதன் முறையாக என்எஸ்ஜி பாதுகாப்பு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்துக்கு முதன்முறையாக தேசிய பாதுகாப்புப் படை (NSG) பாதுகாப்புப் போடப்படுகிறது.

Samayam Tamil 7 Apr 2018, 10:38 am
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்துக்கு முதன்முறையாக தேசிய பாதுகாப்புப் படை (NSG) பாதுகாப்புப் போடப்படுகிறது.
Samayam Tamil maxresdefault


11 ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் இன்று மும்பையில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு தேசிய பாதுகாப்புப் படை பாதுகாப்பில் ஈடுபட உள்ளது. நாளை முதல் மே 19ஆம் தேதி வரை நடக்கும் மொத்தம் 7 போட்டிகளுக்கு இந்தப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

கடந்த முறை ஹைதராபாத்தில் 1800 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடப்பட்டிருந்தனர். இந்த முறை 2,500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். 5 தீயணைப்பு வாகனங்கள், 8 ஆம்புலன்ஸ்களும் தயாராக உள்ளன.

இந்த மைதானத்தில் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைக் கண்காணிக்க பிரத்யே கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்