ஆப்நகரம்

வைடு கொடுக்காத அம்பயர்... பேட்டை தூக்கி வீசி அடாவடி பண்ண போலார்டுக்கு அபராதம்!

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல்., கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் அம்பயர் வைடு கொடுக்காத காரணத்தால், மும்பை வீரர் போலார்டு அடாவடி செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Samayam Tamil 13 May 2019, 8:08 am

ஹைலைட்ஸ்:

  • ஐபிஎல்., விதிகளை மீறிய போலார்டுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Kieron Pollard 1
ஹைதராபாத்: சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல்., கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் அம்பயர் வைடு கொடுக்காத காரணத்தால், மும்பை வீரர் போலார்டு அடாவடி செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் சிறப்பாக முடிந்தது.

மீண்டும் ‘எல் கிளாசிகோ’:
இதன் லீக் போட்டிகளின் முடிவில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ஃபைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் நான்காவது முறையாக சாம்பியன்பட்டம் வென்று சாதித்தது.
போலார்ட் அடாவடி:
இதில் மும்பை அணி பேட்டிங் செய்த போது சென்னை வீரர் டுவைன் பிராவோ வீசிய போட்டியின் 20வது ஓவரின் 2வது பந்து ‘வைடாக’ சென்றது. ஆனால் அம்பயர் நிதின் மேனன், ‘வைடு’ வழங்கவில்லை.
அம்ப்யரக்ள் எச்சரிக்கை:
அடுத்த பந்தும் பிராவோ இததேபோல வீச, வைடு வழங்கப்படவில்லை. இதனால் கடுப்பான போலார்டு, பேட்டை மேலே துாக்கி போட்டு பிடித்தார். பின், ‘ஸ்டம்பை’ விட்டு விலகி நின்றார் போலார்டு. இதனை கவனித்த அம்பயர் நிதின் மேனன், லெக் அம்பயர் இயான் கோல்டு, இப்படி செய்யக்கூடாது என, போலார்டை எச்சரித்தனர்.
அபராதம்:
ஐபிஎல்., விதிகளை மீறிய போலார்டுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்