நடப்பு ஐபிஎல் தொடரின் 14ஆவது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, துவக்க வீரர்களாக ராகுலும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் புவனேஷ்வர் குமார். அவரது பந்தில் ராகுல் வெளியேறினார். ராகுலைத் தொடர்ந்து கிறிஸ் கெய்ல் களமிறங்கினார்.
சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய மயங்க் அகர்வால் 25 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து கலீல் அகமது பந்தில் வெளியேறினார். அடுத்ததாக வந்த நிகோலஸ் பூரனும் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். கிறிஸ் கெய்லையும் ரஷித் கான் வெளியேற்றி அதிர்ச்சியளித்தார். இதனால் பஞ்சாப் அணி 8.4 ஓவர்களில் 47 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, பஞ்சாப் அணி 100 ரன்கள் எடுப்பதே சிரமமானது.
கடைசி நேரத்தில் ஷாருக் கான் அடித்த 22 ரன்களால் பஞ்சாப் அணி 100 ரன்களைக் கடந்தது. 20 ஓவர்கள் விளையாடுவதற்குள் பஞ்சாப் அணி தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 19.4 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 120 ரன்கள் எடுத்துள்ளது. ஹைதராபாத் அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்களும் அபிஷேக் ஷர்மா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். சிக்கனமாகப் பந்துவீசிய ரஷித் கான் தனது 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, முக்கியமான கெய்ல் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
பஞ்சாப் அணி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், இன்றைய போட்டியில் மிகவும் குறைவான ரன்களை எடுத்து மற்றுமொரு தோல்விக்கு வழிவகுத்துள்ளது. மைதானத்தின் மாறுபடும் தன்மைக்கு ஏற்ப வீரர்களின் ஆட்டத்தில் மாற்றம் இருக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், பஞ்சாப் அணியிடம் அப்படிப்பட்ட பிளான் பி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைய போட்டியில் தோல்வியுற்றால் பஞ்சாப் அணிக்கு மேலும் நெருக்கடி ஏற்படும்.
சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய மயங்க் அகர்வால் 25 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து கலீல் அகமது பந்தில் வெளியேறினார். அடுத்ததாக வந்த நிகோலஸ் பூரனும் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். கிறிஸ் கெய்லையும் ரஷித் கான் வெளியேற்றி அதிர்ச்சியளித்தார். இதனால் பஞ்சாப் அணி 8.4 ஓவர்களில் 47 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, பஞ்சாப் அணி 100 ரன்கள் எடுப்பதே சிரமமானது.
கடைசி நேரத்தில் ஷாருக் கான் அடித்த 22 ரன்களால் பஞ்சாப் அணி 100 ரன்களைக் கடந்தது. 20 ஓவர்கள் விளையாடுவதற்குள் பஞ்சாப் அணி தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 19.4 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 120 ரன்கள் எடுத்துள்ளது. ஹைதராபாத் அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்களும் அபிஷேக் ஷர்மா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். சிக்கனமாகப் பந்துவீசிய ரஷித் கான் தனது 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, முக்கியமான கெய்ல் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
பஞ்சாப் அணி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், இன்றைய போட்டியில் மிகவும் குறைவான ரன்களை எடுத்து மற்றுமொரு தோல்விக்கு வழிவகுத்துள்ளது. மைதானத்தின் மாறுபடும் தன்மைக்கு ஏற்ப வீரர்களின் ஆட்டத்தில் மாற்றம் இருக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், பஞ்சாப் அணியிடம் அப்படிப்பட்ட பிளான் பி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைய போட்டியில் தோல்வியுற்றால் பஞ்சாப் அணிக்கு மேலும் நெருக்கடி ஏற்படும்.