ஆப்நகரம்

காயம் காரணமாக வெளியேறிய அஸ்வின் மீண்டும் வருவாரா? முக்கிய அறிவிப்பு...

தோள்பட்டை வலி காரணமாக ஆட்டத்தை விட்டு வெளியேறியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் போட்டியில் கலந்துகொள்வாரா என்பது குறித்து செய்தி வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Sep 2020, 3:55 pm
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தோல் பட்டையில் வலி ஏற்பட்டது. உடனே அவர் களத்திலிந்து வெளியேறினார். ஐபிஎல் உலகிற்கு மீண்டும் திரும்புவாரா மாட்டாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil ashvin video grab photo


பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பவர் பிளேவின் இறுதி ஓவரை அஸ்வின் வீசி 2 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார் அஸ்வின . அந்த ஓவரின் கடைசி பந்தை மேக்ஸ்வெல், அஸ்வினுக்கு வலது புறமாக அடித்தார். அதைத் தடுக்க முயற்சித்த அஸ்வினுக்கு தோல் பட்டையில் வலி ஏற்பட்டது. உடனே களத்தில் இருந்து வெளியேறினார். மீண்டும் ஐபிஎல் உலகிற்கு எப்போது திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில் தற்போது அவர் முழுமையாக குடமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்விட் ட்வீட் ஒன்றை வெளியிட்டு இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். “நேற்று இரவு வரை தோல்பட்டை காயத்தால் அவதிப்பட்டேன். தற்போது, வலி முழுமையாகக் குறைந்துள்ளது. மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அம்பத்தி ராயுடுவின் ஓய்வு முடிவை மாற்றியமைத்த ஒரேயொரு போன் கால்!

டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், சமீபத்தில் கொடுத்த பேட்டியில், அஸ்வின் விரைவில் குணமடைந்து அணியில் இணைவார் என்று தெரிவித்திருந்தார்.

“அஸ்வினிடம் வலி தொடர்பாக கேட்டறிந்தேன். வலி குறைந்துவிட்டது, அடுத்த போட்டியில் களமிறங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மருத்துவர் கையில்தான் முடிவு உள்ளது. அவர் கூறுவதைப் பொறுத்துத்தான் அஸ்வின் அணியில் இணைவாரா மாட்டரா என்பதைத் தெளிவாகக் கூறமுடியும்” என ஸ்ரேயஸ் ஐயர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்