ஆப்நகரம்

பினிஷிங் சரியில்லாம 142 ரன்களில் அவுட்டான ராஜஸ்தான்!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில், முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 19 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Samayam Tamil 15 May 2018, 9:57 pm
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில், முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 19 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
Samayam Tamil KULDEE


கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 11வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று தொடங்கிய 49வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், திரிபதி மற்றும் பட்லர் ஆகியோர் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் ஓவரின் முதல் பந்தில், திரிபதி கொடுத்த கேட்ச்சை மவி தவறவிட, தொடர்ந்து சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினார். திரிபதி (27), ரகானே (11), பட்லர் (39) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி ரன்கள் சேர்ப்பதில் தட்டு தடுமாறியது. இறுதியில் பந்துவீச்சாளர் உனாட்கட் வந்து ஓரளவு ரன்கள் சேர்க்க இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 142 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்