ஆப்நகரம்

IPL 2021: ‘ஏப்பா, முதல்ல கோப்பைய ஜெயிச்சுட்டு பேசுங்கப்பா’: ஐபிஎல் அணியை கலாய்த்த நியூசி வீரர்!

முதலில் கோப்பையை ஜெயித்து காட்டுங்கள் என ஐபிஎல் அணியை நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கலாய்த்துள்ளார்.

Samayam Tamil 2 Jan 2022, 6:34 pm
ஐபிஎல் ஆரம்பித்தபோது, முதல் சீசனிலேயே கோப்பை வென்று அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன்பிறகு படுமோசமாக சொதப்பி, பிளே ஆஃப் முன்னேறுவதையே பெரும் சாதனையாகக் கருதி வருகிறது. குறிப்பாக, கடந்த சில சீசன்களில் அந்த அணியின் ஆட்டம் படுமட்டமாக இருக்கிறது.
Samayam Tamil ஸ்காட் ஸ்டைரிஸ்


13ஆவது சீசனில் கடைசி இடத்தைப் படித்த அந்த அணி, 14ஆவது சீசனில் 7ஆவது இடத்தைப் பிடித்தது. இந்த 14ஆவது சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் துவங்குவதற்கு முன்பு கணிப்பை வெளியிட்ட நியூசிலாந்து அணி முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், மும்பை இந்தியன்ஸ் முதலிடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 3ஆவது இடத்தையும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8ஆவது இடத்தை பிடிக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த கணிப்பை மனதில் வைத்து தற்போது ட்வீட் செய்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, “இந்த வருடம் நிச்சயம் கோப்பை வென்றே ஆக வேண்டும் இதுதான் நமது இலக்கு. ஸ்டாக் ஸ்டைரிஸ் கணிப்பின் தரவரிசையில் நாம் முன்னேறி காட்ட வேண்டும்” எனப் பதிவிட்டிருந்திருந்தது. இதனைப் பார்த்த ஸ்டைரிஸ் உடனே ரீட்விட் செய்து, “முதலில் இதனை செய்து காட்டுங்கள்” என கூறி கண் அடிக்கும் இமோஜியை பதிவிட்டு, கலாய்த்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜாஸ் பட்லர் (10 கோடி), யாஷஸ்வி ஜெய்ஷ்வால் (4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்