மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கெய்ரன் பொல்லார்ட் டி20 போட்டிகளில் அபாயகரமான பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். இவரைப் போல், பஞ்சாப் கிங்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள தமிழக வீரர் ஷாருகான் செயல்படுவார் எனப் பயிற்சியாளர் அனில் கும்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள கும்ளே “கெய்ரன் பொல்லார்ட்டைப் போல் ஷாருகான் செயல்படுவார் என நம்புகிறேன். நான் மும்பை அணியில் இருந்தபோது கெய்ரன் பொல்லார்டின் ஆட்டத்தை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவர் அபாயகரமானவர். பயிற்சியில் அவருக்கு பந்துபோடும்போது, எனக்கு நேராகப் பந்தை அடிக்காதீர்கள் எனக் கூறியிருக்கிறேன். அந்த அளவிற்கு அதிவேகமாகப் பேட்டை சுழற்றக் கூடியவர்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இப்போது எனக்கு வயதாகிவிட்டது. நீண்ட நேரம் பந்து போட முடியாது. பயிற்சியின்போது ஷாருகானுக்கு நிச்சயம் பந்துவீச மாட்டேன். அவர் பொல்லாட்டைப்போல் அதிவேகமாக மட்டை சுழற்றுகிறார்” எனக் கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் 14ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தமிழக வீரர் ஷாருகானை 5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர், சமீபத்தில் நடந்துமுடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு, தமிழ்நாடு அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள கும்ளே “கெய்ரன் பொல்லார்ட்டைப் போல் ஷாருகான் செயல்படுவார் என நம்புகிறேன். நான் மும்பை அணியில் இருந்தபோது கெய்ரன் பொல்லார்டின் ஆட்டத்தை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவர் அபாயகரமானவர். பயிற்சியில் அவருக்கு பந்துபோடும்போது, எனக்கு நேராகப் பந்தை அடிக்காதீர்கள் எனக் கூறியிருக்கிறேன். அந்த அளவிற்கு அதிவேகமாகப் பேட்டை சுழற்றக் கூடியவர்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இப்போது எனக்கு வயதாகிவிட்டது. நீண்ட நேரம் பந்து போட முடியாது. பயிற்சியின்போது ஷாருகானுக்கு நிச்சயம் பந்துவீச மாட்டேன். அவர் பொல்லாட்டைப்போல் அதிவேகமாக மட்டை சுழற்றுகிறார்” எனக் கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் 14ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தமிழக வீரர் ஷாருகானை 5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர், சமீபத்தில் நடந்துமுடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு, தமிழ்நாடு அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.