ஆப்நகரம்

CSK vs KKR: 'முதலிடத்தில் ஷிவம் துபே'...இவர கண்டாலே ஏன் பயப்படுறாங்கனு...இப்போதான் தெரிது!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 15 May 2023, 7:01 am
ஐபிஎல் 16ஆவது சீசன் 61ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.
Samayam Tamil ஷிவம் துபே


கொல்கத்தா அணிக்கு ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டதால், அந்த அணி மீது எதிர்பார்ப்பு இல்லை. சிஎஸ்கே இப்போட்டியில் வென்றால், முதல் அணியாக பிளே ஆப் சுற்றை உறுதி செய்யும் என்பதால், சிஎஸ்கே வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்நிலையில், சேப்பாக்கத்தில் டாஸ் வென்ற தோனி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

சிஎஸ்கே இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டிவோன் கான்வே 30 (28), ஷிவம் துபே 48 (34) ஆகியோர் அபாரமாக செயல்பட்டு அசத்தினார்கள். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் 17 (13), ரஹானே 16 (11), மொயின் அலி 1 (2) போன்றவர்கள் படுமோசமாக சொதப்பினார்கள். இறுதிக் கட்டத்தில் ஜடேஜா 20 (24) ரன்களை சேர்த்தார். இதனால், சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 144/6 ரன்களை மட்டும்தான் சேர்த்தது.

கொல்கத்தா இன்னிங்ஸ்:


இலக்கை துரத்திக் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஓபனர்கள் ஜேசன் ராய் 12 (15), குர்பஸ் 1 (4), வெங்கடேஷ் ஐயர் 9 (4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், இதனைத் தொடர்ந்து நிதிஷ் ராணா 57 (44), ரிங்கு சிங் 54 (43) ஆகியோர் அபாரமாக செயல்பட்டு அசத்தியதால், கொல்கத்தா அணி 18.3 ஓவர்கள் முடிவில் 147/4 ரன்களை எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

ஷிவம் துபே முதலிடம்:

நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் ஷிவம் துபே, சஞ்சு சாம்சனுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த இருவரும் ஸ்பின்னர்களுக்கு எதிராக தலா 19 சிக்ஸர்களை அடித்துள்ளனர்.

பயம்:

ஷிவம் துபே களத்திற்குள் வந்தாலே, ஸ்பின்னர்களை கண்ணில் காட்டாமல், வேகப்பந்து வீச்சாளர்களைத்தான் எதிரணி பயன்படுத்த விரும்புகிறது. அந்த அளவுக்கு துபே ஸ்பின்னர்களை துவம்சம் செய்து வருகிறார். துபே சற்று உயரமாக இருப்பதால், ஸ்பின்னர்களின் லெந்தை சிறப்பாக எதிர்கொண்டு பந்துகளை தூக்கியடிக்க முடிகிறது. உயரம்தான் துபேவின் பலமாக இருக்கிறது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்