ஆப்நகரம்

CSK: 'சிஎஸ்கேவை நம்ப வைத்து ஏமாற்றிய'...குட்டி பிராவோ: பிளேயிங் XI-ல் திடீர் பின்னடைவு..ரசிகர்கள் ஷாக்!

சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் திடீரென்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 27 Mar 2023, 10:25 am
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதன்படி போட்டிகள் மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிய உள்ளது. துவக்க போட்டியும், பைனலும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil சென்னை சூப்பர் கிங்ஸ்


ஹோம் கிரோண்டில்:

கொரோனா காரணமாக கடந்த இரண்டு சீசன்களில் அணிகள், தங்களது ஹோம் கிரோண்டில் விளையாட முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், இந்தாண்டில் அனைத்து அணிகளும் தங்களது ஹோம் கிரோண்டில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

சிஎஸ்கே மீது எதிர்பார்ப்பு:

கேப்டன் மகேந்திரசிங் தோனி தனது கடைசிப் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவேன் எனக் கூறியிருந்தார். அதன்படி இந்தாண்டு கோப்பையை வென்றுகொடுத்துவிட்டு, சென்னையில் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதற்காக, சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி முகாமை துவங்கிவிட்டனர்.

அந்த பௌலர் இல்லை:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெத் பௌலராக டுவைன் பிராவோ இருந்தார். இவர் தற்போது ஓய்வை அறிவித்துவிட்டதால், இவருக்கு மாற்றான டெத் பௌலர் இல்லை. பென் ஸ்டோக்ஸ் வாங்கப்பட்டாலும், இவரால் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட முடியாது.

நம்பிக்கை:

இந்நிலையில், கைல் ஜேமிசனுக்கு மாற்றாக வாங்கப்பட்ட சிசாண்டா மகாலா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி அசத்தியிருந்தார். இக்கட்டான நிலையில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்ததாலும், பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்டதாலும், பிராவோ இடத்தை இவர் பிடிப்பார் எனக் கருதப்பட்டது.

ஆனால், அடுத்த போட்டியிலேயே மகாலா 4 ஓவர்களில் 67 ரன்களை விட்டுக்கொடுத்து படுமோசமாக சொதப்பிவிட்டார். இதனால், சிஎஸ்கேவில் டெத் பௌலரின் இடம் மீண்டும் காலியாகவே இருக்கிறது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

முதல் போட்டி:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இப்போட்டி மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் துவங்கி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்