ஆப்நகரம்

ஹைதராபாத் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த மூன்று முக்கியத் தவறுகள்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயித்த 127 ரன்களை எடுக்க முடியாமல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

Samayam Tamil 25 Oct 2020, 10:49 am
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியை, ஹைதராபாத் அணி பௌலர்கள் திணறடித்தனர். இதனால் அந்த அணி 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 16 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. கடைசி 12 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டபோது கிறிஸ் ஜோர்டன், அர்ஷ்தீப் சிங் இருவரும் நான்கு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர். இதனால், பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
Samayam Tamil srh


இப்போட்டியில் தோற்றதன் மூலம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. மொத்தம் 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்விகளைச் சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் நிலைக்குச் சென்றது. எதிர்வரும் 3 போட்டிகளிலும் அதிக நெட் ரன்ரேட் விகிதத்துடன் வெற்றிபெற்றால் மட்டுமே, ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி செய்த மூன்று முக்கியத் தவறுகளை பற்றி பார்ப்போம்.

கடைசி நேர ட்விஸ்ட்: பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திய பஞ்சாப்!

பெரிய ஷாட்களை ஆட முயற்சித்தது!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் குவித்தது. இனி ஓவருக்கு 6 ரன்கள் வீதம் எடுத்தாலே சுலபமாக வெற்றிபெற்று விடலாம் என்ற நிலையில், டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் பெரிய ஷாட் ஆட முயற்ச்சித்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், சுலபமான இலக்கை கடினமாக்கி கடைசியில் தோல்வியைப் பரிசாகப் பெற்றது.

மிடில் வரிசை படுமோசமாக சொதப்பியது!

ஹைதராபாத் அணியின் மிடில் வரிசை பலமானதாகவே பார்க்கப்படுகிறது. மனீஷ் பாண்டே, விஜய் சங்கர் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். ஆனால், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடத் தவறிவிட்டனர். சுலபமான இலக்கை துரத்திக்கொண்டு செல்லும்போது, ஓடி ரன்களை எடுக்க முற்படாமல் பெரிய ஷாட்களை ஆட அதிக ஆர்வம் காட்டினர்.

சிஎஸ்கே தோல்வி காரணமாக தோனி மன வருத்தம்!

பேட்டிங் வரிசையை மாற்றியது!

ஹைதராபாத் அணிக்கு துவக்கம் ஓரளவுக்குச் சிறப்பாக அமைந்தது. டேவிட் வார்னர், ஜானி பேட்ஸ்டோ ஆட்டமிழந்ததும் மனீஷ் பாண்டே களமிறக்கப்பட்டார். அடுத்து விஜய் சங்கர், பிரியம் கர்க் களமிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்துல் சமத் களமிறக்கப்பட்டார். இவர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். வழக்கமான பேட்டிங் வரிசையில் வீரர்களை களமிறக்கியிருந்தால், ஹைதராபாத் அணி அபார வெற்றிபெற்றிருக்கும் எனக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்