ஆப்நகரம்

ஐபிஎல் 2020: சொந்த அணிக்கே ஆப்பு வைத்த 5 வீரர்கள்!

இருந்த இடம் தெரியாமல் போன நட்சத்திர பேட்ஸ்மேன்கள்!

Samayam Tamil 12 Nov 2020, 12:29 pm
ஐபிஎல் 13ஆவது சீசன் விறுவிறுப்பு, பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்துள்ளது. ஒரே போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர் போன்ற சில ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளும் அரங்கேறியது. அதேபோல, அணி உரிமையாளர்கள் தலையில் இடியைத் தூக்கிப் போடும் அளவிற்கு சில தரமான சம்பவங்களும் நடைபெற்றன. ஆம், 10.7 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் 14 போட்டிகளில் 108 ரன்கள் மட்டுமே அடித்தால், தலையில் இடி விழுந்த மாதிரிதானே இருக்கும். இந்த சீசனில் நல்ல சம்பளம் பெற்றுக்கொண்டு, சொந்த அணிக்கே ஆப்பு வைத்த டாப் 5 வீரர்கள் குறித்து இங்கே பார்ப்போம்.
Samayam Tamil top 5 worst performed star batsman in ipl 2020
ஐபிஎல் 2020: சொந்த அணிக்கே ஆப்பு வைத்த 5 வீரர்கள்!


ரிஷப் பந்த்:

டெல்லி கேபிடல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், இந்த சீசனில் படுமோசமாக விளையாடினார். துவக்கம் முதலே ரன்களை குவித்த திணறி வந்த அவர், அடுத்தடுத்த போட்டிகளில் பெரிய ஷாட்கள் அடிப்பதைத் தவிர்த்து, நிதானமாக ஆட முயற்சித்தார். அதுவும் பலன் தரவில்லை. இறுதிப் போட்டியில் மட்டும் சிறப்பாக சோபித்து அரைசதம் கடந்தார். ஐபிஎல் 13ஆவது சீசனில் ரிஷப் பந்த் எடுத்த ஒரே அரை சதம் இதுவாகும்.

மகேந்திரசிங் தோனி:

மகேந்திரசிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்றதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அதிரடியாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கோப்பை வென்று தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசனில் 25 சராசரியுடன் 200 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

கிளென் மேக்ஸ்வெல்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கிளென் மேக்ஸ்வெல்லை கடுமையாகப் போராடி 10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர் இதற்குமுன், 2014ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடி அதிரடியாக பேட்டிங் செய்து, அணியை இறுதிப்போட்டி வரை கூட்டிச் சென்றார். ஆனால், இந்த சீசனில் 14 போட்டிகளில் பங்கேற்று வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல, பந்துவீச்சிலும் சோபிக்கவில்லை.

தினேஷ் கார்த்திக்:

கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அணியின் கேப்டனாக இருந்தவர், ரன்களை குவிக்கத் தவறியதால் பதவியிலிருந்து விலகினார். ஆனால், அதன் பிறகும் அதிரடி காட்ட முடியவில்லை. 14 போட்டிகளில் பங்கேற்று வெறும் 169 ரன்களை மட்டுமே எடுத்தார். அதில் ஒரு அரை சதம் அடங்கும்.

ஆண்ட்ரே ரஸல்:

ஆண்ட்ரே ரஸல் கடந்த சீசன்களில் ரன் மழை பொழிந்த நிலையில், இந்த சீசனில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். தொடர்ந்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால், சில போட்டிகளில் ஓரம் கட்டப்பட்டார். மொத்தம் 10 போட்டிகளில் பங்கேற்ற ரஸல், 13 சராசரியுடன் 117 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு அரை சதம் கூட அவர் அடிக்கவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்