ஆப்நகரம்

‘டி20 உலகக் கோப்பையில்’…இந்த பையன எடுக்காம விட்றாதீங்க: மேட்ச் வின்னரா இருப்பான்: ஹர்பஜன் பளிச்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இந்த இளம் வீரருக்கு இடம் கொடுக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

Samayam Tamil 22 Apr 2022, 3:58 pm
ஐபிஎல் 15ஆவது சீசன் கடந்த மார்ச் 26ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இதுவரை 30 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு போட்டியும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல்தான் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil ஹர்பஜன் சிங்


குறிப்பாக சீனியர் வீரர்களைவிட இளம் வீரர்கள் பலர் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருவது, ரசிகர்கள் மத்தியிலான ஆவலை இன்னமும் அதிகப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமான இளம் வீரர் உம்ரான் மாலிக்தான். தொடர்ந்து 145+ வேகத்தில் பந்துவீசி பேட்ஸ்மேன்களை மிரட்டி வருகிறார். குறிப்பாக, அனைத்து போட்டிகளிலும் அதிவேகமாக பந்துவீசி, அதிவேகமாக பந்துவீசியவர்களுக்கு வழங்கப்படும் ஒரு லட்ச ரூபாயை தொடர்ந்து வென்று வருகிறார்.

இத்தொடரில் இதுவரை மொத்தம் 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ள இவர், ஹைதராபாத் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார். இதனால், இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், உம்ரான் மாலிக்கிற்கு நிச்சயம் டி20 அணியில் இடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் பேட்டி:

“உம்ரான் மாலிக்கிற்கு டி20 உலகக் கோப்பை அணியில் நிச்சயம் இடம் கொடுக்க வேண்டும். இந்திய அணியில் இடம்பிடிக்க தேவையான அனைத்து விஷயங்களும் உம்ரான் பந்துவீச்சில் இருப்பதாக நான் கருதுகிறேன். வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் உம்ரான் மாலிக்கை சேர்த்தால், நிச்சயம் மேட்ச் வின்னராக இருப்பார் என நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்