ஆப்நகரம்

ஏன் ஐபிஎல் இறுதிப் போட்டியை காண வரவில்லை - உண்மையை சொன்ன சச்சின்

ஐபிஎல் 2018 கிரிக்கெட் இறுதிப் போட்டி ஞாயிறு அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. மும்பையில் போட்டி நடக்கிறது என்றால் சச்சின் அந்த போட்டியை காண தவறவிடுவதில்லை.

Samayam Tamil 29 May 2018, 4:21 pm
ஐபிஎல் 2018 கிரிக்கெட் இறுதிப் போட்டி ஞாயிறு அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. மும்பையில் போட்டி நடக்கிறது என்றால் சச்சின் அந்த போட்டியை காண தவறவிடுவதில்லை.
Samayam Tamil Sachin-Tendulkar


11வது சீசன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணியின் வாட்சன் அடித்த அதிரடி சதத்தால் ஐதராபாத் அணியை வென்று மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதித்தது.

மும்பை மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கும் போது அதை நேரில் கண்டுகளிக்க கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வருவது வழக்கம். ஆனால் ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது சச்சின் மைதானத்துக்கு நேரில் வரவில்லை. மும்பை அணி விளையாடாததால் தான் வரவில்லையோ என ரசிகர்கள் நினைத்தனர்.

இந்நிலையில் தான் ஏன் போட்டியை நேரில் பார்க்க வரவில்லை என விளக்கும் விதமாக தனது டுவிட்டரில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

சச்சின் பதிவில், “பல கிரிக்கெட் ரசிகர்களால் ஐபிஎல் கவனிக்கப்பட்டது. சென்னை vs ஐதராபாத் இடையே இறுதிப் போட்டி சிறப்பாக அமைந்தது. இந்த போட்டியை மிகச்சிறந்த பாடகி லதா மங்கேஸ்கர் சகோதரியுடன் கண்டு களித்தது மேலும் சிறப்பாக அமைந்தது.” என டுவிட் செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்