ஆப்நகரம்

‘அடிச்சு சொல்றேன்’ இந்திய அணியின் ‘அடுத்த ஹீரோ’ இவர்தான்…இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய இர்பான் பதான்!

இந்திய அணியின் அடுத்த ஹீரோ இவர்தான் என இர்பான் பதான் இளம் வீரரைப் புகழ்ந்துள்ளார்.

Samayam Tamil 25 Sep 2021, 9:52 pm
ஐபிஎல் 14ஆவது சீசன் இரண்டாவது பாதி ஆட்டங்கள் அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சிஸ்கே போன்ற அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு வெற்றிகளை மட்டும் பெற்றிருந்த கொல்கத்தா அணி, இரண்டாவது பாதியின் முதல் இரண்டு போட்டிகளில் மிரட்டலாக விளையாடி, வெற்றிகளைப் பெற்று அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
Samayam Tamil இர்பான் பதான்


இதற்குக் காரணம் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளம் ஓபனர் வெங்கடேஷ் ஐயர்தான். முதல் போட்டியில் ஆர்சிபி நிர்ணயித்த 92 ரன்களை கொல்கத்தா 10 ஓவர்களில் சேஸ் செய்ய வெங்கடேஷ் ஐயர் உறுதுணையாக இருந்தார். அடுத்து, மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 156 ரன்களை, வெறும் 15 ஓவர்களில் விரட்டிப் பிடிக்கவும் வெங்கடேஷ் ஐயர்தான் முக்கிய காரணமாக இருந்தார். இந்த இரண்டு போட்டிகளில் இவர் அடித்த ரன்கள் 41 (27), 53 (30) ஆகும். குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்திருக்கிறார். இதுவரை, சரியான ஓபனர்கள் கிடைக்காமல் திணறி வந்த கொல்கத்தாவுக்கு ஒரு ஸ்டார் வீரராக வெங்கடேஷ் ஐயர் கிடைத்திருக்கிறார். இவரைப் பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

இர்பான் பேட்டி:


இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் இர்பான் பதான், வெக்டேஷ் ஐயரை புகழ்ந்து பேசியுள்ளார். “வெங்கடேஷ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சிறப்பானா ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரின் ஒவ்வொரு ஷாட்களும் தனித்துவமாக இருக்கிறது. குறிப்பாக, மும்பை அணிக்கு எதிரான அவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, டிரன்ட் போல்ட் போன்றவர்களை வெங்கடேஷ் ஐயர் எவ்வித தயக்கமும் இன்றி, அசால்ட்டாக எதிர்கொண்டார். எதிர்காலத்தில் வெங்கடேஷ் ஐயர், இந்திய அணியின் தலைசிறந்த வீரராகத் திகழ வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது” எனக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்