15 ஆவது சீசனின் நேற்றைய போட்டியில், கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது
முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, உமேஷ் யாதவின் பந்துவீச்சில் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை விட்டது. அதிகபட்சமாக பானுகா ராஜபக்ச அதிரடியாக 9 பந்துகளில் 31 ரன்களும், ககிசோ ரபாடா 16 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தாவும் சற்று தடுமாறியது. பவர்ப்ளேவிலேயே மூன்று விக்கெட்டுகளை எடுத்த பஞ்சாபின் பக்கம் ஆட்டம் சற்று திரும்பியது. அப்போது களம் இறங்கிய ஆண்ட்ரே ரஸல், பந்துகளை விளாசி தள்ளினார். குறிப்பாக ஓடியின் ஸ்மித் வீசிய 12ஆவது ஓவரில் 4 சிக்ஸர்கள் உட்பட 30 ரன்களை குவித்து அசத்தினார். இப்படி அதிரடியாக விளையாடிய ரஸல், 31 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரி என 70 ரன்களை குவித்தார். இவரின் அதிரடியால் கொல்கத்தா அணி எளிதில் 14.3 ஓவரிலேயே வெற்றி பெற்றது.
மயங்க் பேட்டி:
இதையடுத்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால், "நாங்கள் சரியாக பேட்டிங் ஆடாததே இந்த தோல்விக்கு காரணம். ரஸல் மிக சிறப்பாக விளையாடினார். எங்களுக்கு துவக்கம் நன்றாக அமைந்தது. நிச்சயம் 170 ரன்களை எங்களால் எடுத்திருக்க முடியும். ஆனால் அந்த துவக்கத்தை நாங்கள் சரியாக பயன்படுத்த தவறிவிட்டோம். தொடக்க போட்டிகளில் இது போல தோல்வி சரியானதுதான். எங்கள் தவறுகளை திருத்தி அடுத்த போட்டியில் வெற்றி அடைவோம்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆட்டநாயகன் விருதை 4 ஓவர்கள் வீசி, வெறும் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய உமேஷ் யாதவ் பெற்றார்.
முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, உமேஷ் யாதவின் பந்துவீச்சில் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை விட்டது. அதிகபட்சமாக பானுகா ராஜபக்ச அதிரடியாக 9 பந்துகளில் 31 ரன்களும், ககிசோ ரபாடா 16 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தாவும் சற்று தடுமாறியது. பவர்ப்ளேவிலேயே மூன்று விக்கெட்டுகளை எடுத்த பஞ்சாபின் பக்கம் ஆட்டம் சற்று திரும்பியது. அப்போது களம் இறங்கிய ஆண்ட்ரே ரஸல், பந்துகளை விளாசி தள்ளினார். குறிப்பாக ஓடியின் ஸ்மித் வீசிய 12ஆவது ஓவரில் 4 சிக்ஸர்கள் உட்பட 30 ரன்களை குவித்து அசத்தினார். இப்படி அதிரடியாக விளையாடிய ரஸல், 31 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரி என 70 ரன்களை குவித்தார். இவரின் அதிரடியால் கொல்கத்தா அணி எளிதில் 14.3 ஓவரிலேயே வெற்றி பெற்றது.
மயங்க் பேட்டி:
இதையடுத்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால், "நாங்கள் சரியாக பேட்டிங் ஆடாததே இந்த தோல்விக்கு காரணம். ரஸல் மிக சிறப்பாக விளையாடினார். எங்களுக்கு துவக்கம் நன்றாக அமைந்தது. நிச்சயம் 170 ரன்களை எங்களால் எடுத்திருக்க முடியும். ஆனால் அந்த துவக்கத்தை நாங்கள் சரியாக பயன்படுத்த தவறிவிட்டோம். தொடக்க போட்டிகளில் இது போல தோல்வி சரியானதுதான். எங்கள் தவறுகளை திருத்தி அடுத்த போட்டியில் வெற்றி அடைவோம்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆட்டநாயகன் விருதை 4 ஓவர்கள் வீசி, வெறும் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய உமேஷ் யாதவ் பெற்றார்.