ஆப்நகரம்

SRH: நடராஜன் ஏன் களமிறங்கலைனு தெரியுமா? காரணம் இதுதான்!

சன் ஹைதராபாத் அணி வீரர் நடராஜன் நேற்றையப் போட்டியில் களமிறங்கவில்லை.

Samayam Tamil 18 Apr 2021, 7:15 am
சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 150/5 ரன்கள் குவித்தது. 19ஆவது ஓவர் வரை 133/5 ரன்கள் மட்டும் எடுத்திருந்த அந்த அணி, கடைசி ஓவரில் 17 ரன்களை பறக்கவிட்டது. ஒருவேளை கடைசி ஓவரில் 10 ரன்களுக்கும் குறைவாக விட்டுக்கொடுத்திருந்தால், ஹைதராபாத் அணிக்கு எளிய இலக்கு கிடைத்திருக்கும், வெற்றிவாய்ப்பும் பிரகாசமாக இருந்திருக்கும்.
Samayam Tamil நடராஜன்


இறுதியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 137 ரன்கள் எடுத்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

இப்போட்டியில் நடராஜன் களமிறக்கப்படாததே டெத் ஓவரில் 17 ரன்கள் வரை கசிந்ததற்கு முக்கிய காரணம் எனக் கருதப்படுகிறது. நடராஜன் முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராகப் பந்துவீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 53 ரன்கள் அடித்திருந்த ராகுல் திரிபாதியை அவுட் ஆக்கினார். அடுத்து இரண்டாவது போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக 32 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். முதல் சில ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும், டெத் ஓவர்களில் இவர் சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுத்தார்.

பிசிசிஐ ஓரவஞ்சனை, அவமானமா இருக்கு…இந்திய வீரருக்காக குரல் கொடுக்கும் மைக்கேல் வான்!

அடுத்து மூன்றாவது லீக் போட்டியில் மும்பை அணிக்கு எதிராகக் களமிறக்கப்படவில்லை. இதற்கான காரணம் குறித்து ஹைதராபாத் அணிப் பயிற்சியாளர் ட்ரிவர் பெய்லிஸ் விளக்கமாகப் பேசினார். “நடராஜன் இப்போட்டியில் களமிறக்கப்படவில்லை. அவர் கடந்த 6 மாதங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவருக்கு அவ்வப்போது ஓய்வு கொடுத்தால்தான் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசுவார். இதனால்தான் இன்றையப் போட்டியில் களமிறக்கப்படவில்லை. இவரின் திறமையானவர். டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இப்போது நடராஜனுக்கு ஓய்வு கிடைத்ததால் கலீல் அகமதுவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறப்பாகப் பந்துவீசி தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். இதனால், டெத் ஓவர்களில் பந்துவீச இப்போது எங்களுக்குக் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் கிடைத்துவிட்டார்” என்றார்.

இதன்மூலம் எதிர்வரும் போட்டிகளில் கலீல் அகமது, நடராஜன் இருவரும் மாறிமாறி களமிறக்கப்படுவார்கள் என்பது தெரிய வருகிறது.

ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ள ஹைதராபாத் அணி தனது அடுத்த லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஏப்ரல் 14ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்