ஐபிஎல் 16ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பாப் டூ பிளஸி வழிநடத்தி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் 27ஆவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். டூ பிளஸி இம்பாக்ட் வீரராகத்தான் அணியில் இடம்பெற்றார்.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 174/4 ரன்களை மட்டும்தான் சேர்த்தது. விராட் கோலி 59 ரன்களையும், டூ பிளஸி 84 ரன்களையும் குவித்தனர்.
சிராஜ் அபாரம்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்சிம்ரன் சிங் 46 ரன்களையும், ஜிதேஷ் ஷர்மா 41 ரன்களையும் விளாசினார்கள். இருப்பினும், மற்றவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்தனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 150 ரன்களை மட்டும் சேர்த்து, 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இப்போட்டியை ஆர்சிபி வெல்ல முக்கிய காரணம் முகமது சிராஜ்தான். 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார். இதனால், ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
சிராஜ் பேட்டி:
அதன்பிறகு பேசிய சிராஜ், ''எப்போதும் விராட் கோலியின் கேப்டன்ஸியில் விளையாடத்தான் விரும்புவேன். எப்போதுமே என்னை ஊக்குவித்துக்கொண்டே இருப்பார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டால், அவரது தலைமையில் இன்னமும் சிறப்பாக விளையாடுவேன்'' எனக் கூறினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7 முதல் 11ஆம் தேதிவரை இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், கேப்டன் ரோஹித் ஷர்மா சமீப காலமாக பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். மேலும், டி20 கேப்டன்ஸியும் ஹார்திக் பாண்டியாவிடம் சென்றுவிட்டது.
மேலும், தற்போது ஆர்சிபி அணிக்கு மீண்டும் கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த சமயத்தில்தான், சிராஜ் கொடுத்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிராஜ் அப்படி கூறியது ஏன்?
விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமான கேப்டன். இவரது தலைமையில் விளையாடும்போது சிராஜும் ஆக்ரோஷமாக பந்துவீசினார். மேலும், விக்கெட்டை எடுத்தப் பிறகு சிராஜ், கோலி இருவரும் ஆக்ரோஷமாக கொண்டாடி வந்தனர். இதனால், சிராஜிற்கு கூடுதல் உற்சாகம் எப்போதும் இருந்து வந்தது. இந்நிலையில், ரோஹித் கேப்டனாக பொறுப்பேற்றப் பிறகு கூலாக அணியை வழிநடத்தி வருகிறார். இதனால்தான், சிராஜிற்கு அந்த கூடுதல் உற்சாகம் கிடைக்கவில்லை எனக் கருதப்படுகிறது.
இந்த காரணத்திற்காக மட்டும்தான் அவர் கோலி தலைமையில் விளையாட வேண்டும் எனக் கூறியிருப்பதாக கருதப்படுகிறது. வேறு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பாப் டூ பிளஸி வழிநடத்தி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் 27ஆவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். டூ பிளஸி இம்பாக்ட் வீரராகத்தான் அணியில் இடம்பெற்றார்.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 174/4 ரன்களை மட்டும்தான் சேர்த்தது. விராட் கோலி 59 ரன்களையும், டூ பிளஸி 84 ரன்களையும் குவித்தனர்.
சிராஜ் அபாரம்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்சிம்ரன் சிங் 46 ரன்களையும், ஜிதேஷ் ஷர்மா 41 ரன்களையும் விளாசினார்கள். இருப்பினும், மற்றவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்தனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 150 ரன்களை மட்டும் சேர்த்து, 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இப்போட்டியை ஆர்சிபி வெல்ல முக்கிய காரணம் முகமது சிராஜ்தான். 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார். இதனால், ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
சிராஜ் பேட்டி:
அதன்பிறகு பேசிய சிராஜ், ''எப்போதும் விராட் கோலியின் கேப்டன்ஸியில் விளையாடத்தான் விரும்புவேன். எப்போதுமே என்னை ஊக்குவித்துக்கொண்டே இருப்பார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டால், அவரது தலைமையில் இன்னமும் சிறப்பாக விளையாடுவேன்'' எனக் கூறினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7 முதல் 11ஆம் தேதிவரை இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், கேப்டன் ரோஹித் ஷர்மா சமீப காலமாக பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். மேலும், டி20 கேப்டன்ஸியும் ஹார்திக் பாண்டியாவிடம் சென்றுவிட்டது.
மேலும், தற்போது ஆர்சிபி அணிக்கு மீண்டும் கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த சமயத்தில்தான், சிராஜ் கொடுத்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிராஜ் அப்படி கூறியது ஏன்?
விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமான கேப்டன். இவரது தலைமையில் விளையாடும்போது சிராஜும் ஆக்ரோஷமாக பந்துவீசினார். மேலும், விக்கெட்டை எடுத்தப் பிறகு சிராஜ், கோலி இருவரும் ஆக்ரோஷமாக கொண்டாடி வந்தனர். இதனால், சிராஜிற்கு கூடுதல் உற்சாகம் எப்போதும் இருந்து வந்தது. இந்நிலையில், ரோஹித் கேப்டனாக பொறுப்பேற்றப் பிறகு கூலாக அணியை வழிநடத்தி வருகிறார். இதனால்தான், சிராஜிற்கு அந்த கூடுதல் உற்சாகம் கிடைக்கவில்லை எனக் கருதப்படுகிறது.
இந்த காரணத்திற்காக மட்டும்தான் அவர் கோலி தலைமையில் விளையாட வேண்டும் எனக் கூறியிருப்பதாக கருதப்படுகிறது. வேறு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.