ஆப்நகரம்

ஐபிஎல்லில் மேலும் 2 அணிகள் களமிறங்குவது எப்போது? வெளியானது முக்கிய தகவல்!

ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் இணைப்பு குறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Dec 2020, 10:20 am
ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் இணைப்பு குறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ipl series


பிசிசிஐயின் வருடாந்திர பொதுக் கூட்டம் வருகிற வியாழக் கிழமை நடைபெறவுள்ளது. அப்போது, ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் இணைப்பு குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய பிசிசிஐ முக்கிய நிர்வாகி ஒருவர், ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் இணைவது உறுதி. ஆனால், 2022ஆம் ஆண்டு முதல் மட்டுமே அனுமதிக்கப்பட வாய்ப்பு எனத் தெரிவித்தார்.

பிடிஐக்கு பேட்டியளித்த அவர், “மேலும் இரண்டு அணிகளை இணைப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். பெரும்பாலான, அணி உரிமையாளர்கள் ஐபிஎல் தொடரை வருகிற ஏப்ரல் மாதத்தில் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், இடைப்பட்ட மாதங்களில் மெகா ஏலம் நடத்த முடியாத நிலை உள்ளது. மெகா ஏலம் சாத்தியமில்லை என்றால் புது அணிகளை இணைப்பதும் சாத்தியமில்லை”
பிரித்வி ஷாவை மட்டும் குறிவைப்பது சரியா?
“இதனால், புது அணிகள் 2022ஆம் ஆண்டு முதல் மட்டுமே களமிறங்க வாய்ப்புள்ளது. மெகா ஏலம், அணியை வாங்கும் உரிமையாளர்களுக்கு டெண்டர் விடுவது, அந்த பிரச்சனைகள் உள்ளது. அது அனைத்தும் பிப்ரவரி கடைசிக்குள் முடிந்தாலும், அவசரகதியில் தொடரை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இந்த பிரச்சனைகளை எல்லாம் நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் பத்து அணிகள் இடம்பெற்றால் கிட்டதட்ட 94 போட்டிகள் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால், இரண்டரை மாதங்கள் வரை ஐபிஎல் வீரர்கள் வேறு எந்த போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. முக்கிய வெளிநாட்டு வீரர்கள் இதற்கு ஒத்துக்கொள்வார்களா எனக் கேள்வி எழுந்துள்ளது.
தேனிலவில் எடுத்த நடிகையின் ஆடையில்லா போட்டோக்களை கணவரே வெளியிட்டாரா?
மேலும், போட்டியை நேரலை செய்யும் தொலைக்காட்சிக்கு 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை 60 போட்டிகள் வரை மட்டுமே ஒளிபரப்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் 16,347.50 கோடி பிசிசிஐக்கு செலுத்துகின்றனர். போட்டிகள் மேலும் அதிகரித்தால் அவர்கள் மேலும் பெரிய தொகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனையும் பிசிசிஐ கருத்தில்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

இந்த முக்கிய அம்சங்கள் குறித்து வருகிற வியாழக் கிழமை உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு, பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என நிர்வாகிகள் மட்டத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்