ஆப்நகரம்

WPL 2023: 'ஒரேயொரு ஹாட்ரிக்'...அப்படியே மாறிய ஆட்டம்: உபியை துவம்சம் செய்து..மும்பை பைனலுக்கு தகுதி!

உத்திரபிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அபார வெற்றியைப் பெற்றது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 25 Mar 2023, 6:53 am
மகளிர் ஐபிஎல் 2023 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் நடந்து முடிந்து, பிளே ஆஃப் துவங்கிவிட்டது.
Samayam Tamil மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி


லீக் சுற்றில் முதலிடம் பிடித்த டெல்லி மகளிர் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. இந்நிலையில், மற்றொரு பைனல் இடத்தை உறுதிசெய்ய மும்பை இந்தியன்ஸ் மகளிர், உத்திரபிரதேச வாரியர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற உத்திரபிரதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மும்பை இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓபனர்கள் யாஷ்டிகா பாடியா 21 (18), ஹெய்லி மேத்யூஸ் 26 (26) ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நாட் சீவர் பர்ன்ட் 72 (38) மிரட்டலாக விளையாடி ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார். இறுதிக் கட்டத்தில் மெலியா கிர் 29 (19), பூஜா வஸ்டகர் 11 (4) ஆகியோர் அதிரடி காட்டியதால், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 182/4 ரன்களை குவித்து அசத்தியது.

உபி வாரியர்ஸ் இன்னிங்ஸ்:


இலக்கை துரத்திக் களமிறங்கிய உத்திரபிரதேச வாரியர்ஸ் அணியில் கிரன் வாக்வர் 43 (27) மட்டும்தான் பெரிய ஸ்கோர் அடித்தார். ஹெய்லி 11 (6), செராவாட் 1 (8), தஹிலா மெக்ரத் 7 (6) போன்ற முதல்வரிசை பேட்டர்கள் படுமோசமாக சொதப்பியிருந்தார்கள்.

ஹாட்ரிக் விக்கெட்:

ஆட்டத்தின் 12ஆவது ஓவரில் கிர் வீசிய பந்தில் நாக்வார் இரண்டு சிக்ஸர், தீப்தி ஷர்மா ஒரு பவுண்டரி அடித்து 19 ரன்ளை சேர்த்திருந்தார்கள். இதனால், மும்பை அணிக்கு பின்னடைவு ஏற்பட துவங்கியபோது, அடுத்த ஓவரில் வாங் சிறப்பாக பந்துவீசி நாக்வார் 43 (27), சிம்ரன் சேக் 0 (1), எல்லிஸ்டோன் 0 (1) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அசத்தினார்.

இதனால், உத்திரபிரதேச அணி 84/4 என்பதில் இருந்து, மூன்றே பந்துகளில் 84/7 என மாறியது. இறுதியில் உத்திரபிரதேச அணி 17.4 ஓவர்களில் 110/10 ரன்களை மட்டும் சேர்த்து, 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

மும்பை, டெல்லி மகளிர் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி வரும் மார்ச் 26ஆம் தேதி, மும்பையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்