ஆப்நகரம்

பிரித்து மேய்ந்த ‘பலே’ பாண்டியா: அதவேக சதம் விளாசி அசத்தல்!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், 8வது வீரராக களமிறங்கி அதிவேக சதம் விளாசி அசத்தினார் ஹர்திக் பாண்டியா.

TOI Sports 13 Aug 2017, 12:58 pm
கண்டி: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், 8வது வீரராக களமிறங்கி அதிவேக சதம் விளாசி அசத்தினார் ஹர்திக் பாண்டியா.
Samayam Tamil  hardikpandya7 blazes on to his maiden international century in just 86 deliveries the fastest by an indian at number 8 or lower slvind
பிரித்து மேய்ந்த ‘பலே’ பாண்டியா: அதவேக சதம் விளாசி அசத்தல்!


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும், மூன்றாவது டெஸ்ட் போட்டி, கண்டியில் நடக்கிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. பாண்டியா (1), சகா (13) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு ராக்கெட் வேகத்தில் ரன்கள் சேர்த்தார் பாண்டியா. 86 பந்தில் சதம்விளாசிய பாண்டியா, இந்திய அணிக்காக 8வது வீரராக களமிறங்கி அதிகவேக சதம் விளாசிய வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

'25’ பந்தில் ‘50’:
61 பந்தில் முதல் 50 ரன்கள் எடுத்த இவர், அடுத்த 50 ரன்களை வெறும் 25 பந்தில் விளாசி மிடட்டினார்.

5
இலங்கை அணிக்கு எதிராக சதம் விளாசிய பாண்டியா, சர்வதேச அளவில் டெஸ்ட் அரங்கில் முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த ஐந்தாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

* முன்னதாக விஜய் மஞ்ச்ரேக்கர், கபில் தேவ், அஜெய் ரத்ரா, ஹர்பஜன்சிங் ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்