ஆப்நகரம்

மோசமான வெளிச்சத்தால் முடிவுக்கு வந்தது முதல் நாள் ஆட்டம்!

இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக முடிவுக்கு வந்தது.

TOI Sports 16 Nov 2017, 4:52 pm
கொல்கத்தா: இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக முடிவுக்கு வந்தது.
Samayam Tamil 3 in 11 5 overs suranga lakmal 3 0 against sri lanka
மோசமான வெளிச்சத்தால் முடிவுக்கு வந்தது முதல் நாள் ஆட்டம்!


இந்தியா வந்துள்ள இலங்கை அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று துவங்கியது.


போட்டி துவங்கும் முன் ஏற்கனவே கணிக்கப்பட்டது போல, ஈடன் கார்டன் மைதானத்தில் மழை குறுக்கிட்டதால். இதனால் ’டாஸ்’ போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின் உணவு இடைவேளைக்கு பின் மழை நின்ற பின், ’டாஸ்’ வென்ற இலங்கை அணி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இதே நிலை நீடித்ததால், இன்றைய முதல் நாள்போட்டி முடிவுக்கு வந்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில், 3 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (8), ரகானே (0) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை அணி சார்பில் லக்மல் 6 ஓவர்கள் வீசி ஒரு ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட் கைப்பற்றினார்.

முன்னதாக துவக்கம்:
இன்றைய முதல் நாள் போட்டியில் மழை, மோசமான வெளிச்சம் காரணமாக மொத்தமாகவே 11.5 ஓவர்கள் மட்டும் வீசப்பட்டது. இதனால் எஞ்சியுள்ள நாட்களில் வழக்கத்தை விட அரைமணி முன்னதாக துவங்கும் என அம்பயர்கள் அறிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்