ஆப்நகரம்

Ipl: 2 புதிய அணிகள் சேர்ப்பு...ஏலம் நடைபெறும் தேதி இதுதான்...பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஐபிஎல் 15ஆவது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Samayam Tamil 14 Sep 2021, 5:35 pm
ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் உட்பட சில வீரர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 29 போட்டிகள்தான் நடத்தப்பட்டது. 31 போட்டிகள் எஞ்சியிருந்தது.
Samayam Tamil ஐபிஎல்


மீதமுள்ள இந்த 31 போட்டிகளும் எப்போது நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது.

இதெல்லாம் ஒரு பொழப்பா? நான் நம்பவே மாட்டேன்...இங்கிலாந்து ஊடகத்தை விளாசிய கவாஸ்கர்!

புதிய அணிகள்:

இந்த சீசன் முடிந்த உடன் 15ஆவது சீசன் முதல் மேலும் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்படவுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு அணிகள் எந்த நகரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும்? யார் வாங்கப் போகிறார்கள்? என்ற கேள்விக்கு விடைக்கான ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

டோக்கன் வாங்கணும்:

இந்நிலையில் இந்த இரண்டு புதிய அணிகளை வாங்க விரும்பும் அணிகள் முதலில் ஐடிடி என்னும் நுழைவுச் சீட்டை அக்டோபர் 5ஆம் தேதிக்குள் வாங்க வேண்டும் என்றும், இதனை வாங்க 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. மேலும், இந்த 10 லட்ச ரூபாய் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அணிகளுக்கான ஏலம் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.

Ipl 2021: இவங்க எப்படி விளையாடப் போறாங்களோ...பாக்க ஆவலோடு இருக்கேன்: கோலி ஓபன் டாக்!

ரூல்ஸ் இதுதான்:

இந்த நுழைவு சீட்டை வாங்கி, ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 3000 கோடிவரை வருமானம் ஈட்டும் திறனுடையதாக இருக்க வேண்டும். புதிய அணிகளுக்கான ஆரம்ப விலை 2000 கோடி ரூபாய் ஆகும். இதன்மூலம், பிசிசிஐ 5000 கோடி ரூபாய்வரை வருமானம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலம் இந்தியாவில் நடத்தப்பட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. அமீரகம் அல்லது வேறு நாட்டில்தான் நடப்படும் எனத் தெரிகிறது. இந்த புதிய இரண்டு அணிகளும் அகமதாபாத் மற்றும் லக்னோவை மையமாகக் கொண்டு உருவாக்கப்படலாம் என்றும், அதானி மற்றும் ஆர்பிஎஜி குழுமத்தால் இந்த அணிகள் வாங்கப்படலாம் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்