லண்டன்: இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு அஷ்வினை அணியில் சேர்க்காமல் இந்திய கேப்டன் கோலி தவறு செய்துவிட்டார். இதை அவர் அடுத்த போட்டியில் மாற்றிக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய மெத்தனத்தில் களமிறங்கிய இந்திய அணி, இலங்கை அணியை லேசாக கணித்து, சாதனை தோல்வியை சந்தித்தது.
இதன்மூலம் இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதற்கு ஆல் ரவுண்டர் அஷ்வினை அணியில் சேர்காததும் ஒரு காரணம் என ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் லீக் போட்டியில் இந்திய அணி மெகா வெற்றியை பதிவு செய்ததது. அதனால், முன்னாள் கேப்டன் தோனியின் பாணியில், தற்போதை கேப்டன் விராட் கோலியும் வெற்றிக்கூட்டணியை மாற்ற முன்வரவில்லை.
அதனால், இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் பவுலர்களின் முயற்சி அனைத்தும் தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிகச்சுலபமான கேட்ச், பீல்டிங்கில் கோட்டைவிட்ட கேதர் ஜாதவிற்கு, இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் கோலி மீண்டும் வாய்ப்பு அளித்தார்.
அதை ஓரளவு ஜாதவ் பயன்படுத்திக்கொண்டு, கடைசி நேரத்தில் இந்திய அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்த போதும், அவரால் பவுலிங்கில் இந்திய அணிக்கு எந்த பயனும் இல்லை.
ஆனால், இதே அஷ்வினாக இருந்தால், ஜாதவைப்போல பேட்டிங்கில் ஓரளவு கைகொடுப்பதோடு, பவுலிங்கிலும் ரன்களை கட்டுப்படுத்தியிருப்பார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தவிர, கோலி தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியிலாவது இந்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய மெத்தனத்தில் களமிறங்கிய இந்திய அணி, இலங்கை அணியை லேசாக கணித்து, சாதனை தோல்வியை சந்தித்தது.
இதன்மூலம் இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதற்கு ஆல் ரவுண்டர் அஷ்வினை அணியில் சேர்காததும் ஒரு காரணம் என ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் லீக் போட்டியில் இந்திய அணி மெகா வெற்றியை பதிவு செய்ததது. அதனால், முன்னாள் கேப்டன் தோனியின் பாணியில், தற்போதை கேப்டன் விராட் கோலியும் வெற்றிக்கூட்டணியை மாற்ற முன்வரவில்லை.
அதனால், இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் பவுலர்களின் முயற்சி அனைத்தும் தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிகச்சுலபமான கேட்ச், பீல்டிங்கில் கோட்டைவிட்ட கேதர் ஜாதவிற்கு, இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் கோலி மீண்டும் வாய்ப்பு அளித்தார்.
அதை ஓரளவு ஜாதவ் பயன்படுத்திக்கொண்டு, கடைசி நேரத்தில் இந்திய அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்த போதும், அவரால் பவுலிங்கில் இந்திய அணிக்கு எந்த பயனும் இல்லை.
ஆனால், இதே அஷ்வினாக இருந்தால், ஜாதவைப்போல பேட்டிங்கில் ஓரளவு கைகொடுப்பதோடு, பவுலிங்கிலும் ரன்களை கட்டுப்படுத்தியிருப்பார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தவிர, கோலி தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியிலாவது இந்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.