ஆப்நகரம்

சைடு கேப்பில் ரோகித்தை சீண்டிப்பார்த்த அமிர்!

இந்தியா,பாகிஸ்தான் போட்டியில் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இது இன்றைய போட்டியிலும் குறையவில்லை.

TOI Sports 4 Jun 2017, 4:08 pm
பர்மிங்ஹாம்: இந்தியா,பாகிஸ்தான் போட்டியில் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இது இன்றைய போட்டியிலும் குறையவில்லை.
Samayam Tamil 2017 icc champions trophy watch mohammad amir and rohit sharma involves in war of words
சைடு கேப்பில் ரோகித்தை சீண்டிப்பார்த்த அமிர்!


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகளும் பங்கேற்கின்றன.

இதில் பர்மிங்ஹாமில் நடக்கும் ‘பி’ பிரிவு நான்காவது லீக் போட்டியில், இந்தியா அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர் கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஜ் அஹமது , முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

முறைத்த ரோகித்:
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் துவக்கம் அளித்தனர். பாகிஸ்தான் அணிக்கு இளம் அமிர் முதல் ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்துகளில் மிரட்டிய இவர், அடுத்த பந்தை சிறப்பாக வீச, ரோகித் சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட முயற்சித்தார். அப்போது, ரோகித் அவரைப்பார்த்து முறைத்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்