ஆப்நகரம்

பரம எதிரி பாகிஸ்தானுடன் மான்செஸ்டரில் மல்லுக்கட்டும் இந்தியா!

அடுத்த ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை மான்செஸ்டரில் எதிர்கொள்கிறது.

Samayam Tamil 24 Apr 2018, 9:48 pm
புதுடெல்லி: அடுத்த ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை மான்செஸ்டரில் எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அடுத்த ஆண்டு (2019) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இத்தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.

மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி அடுத்த ஆண்டும் இத்தொடர் நடக்கவுள்ளது.

பரம எதிரி பாக்.,...
இந்நிலையில் இந்தியா, தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை வரும் ஜூன் 16ல் மான்செஸ்டரில் நடக்கும் லீக் போட்டியில் எதிர்கொள்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்