ஆப்நகரம்

IPL 2023: ‘சிஎஸ்கேவில் இருக்கும்’…மூன்று முக்கிய பிரச்சினைகள்: எப்படி சமாளிக்கப் போகிறார் தோனி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் மூன்று முக்கிய பிரச்சினைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 7 Jan 2023, 6:56 am
ஐபிஎல் 15ஆவது சீசனில் படுமோசமாக சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டும் பெற்று, புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தை பிடித்து, ரசிகர்கள் ஷாக் கொடுத்தனர்.
Samayam Tamil சென்னை சூப்பர் கிங்ஸ்


கடந்த சீசனில் தீபக் சஹால் இல்லாததால் பவர் பிளே, டெத் ஓவர்களில் சிஎஸ்கே சற்று பின்னடைவை சந்தித்தது. இருப்பினும், ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டு மிடில் ஓவர்களில் சராசரியாக ஓவருக்கு 7.72 ரன்களை மட்டும்தான் விட்டுக்கொடுத்தனர். 12.73% சதவீதம்தான் மிடில் ஓவர்களில் பவுண்டர்கள் சென்றது. தற்போது, 16ஆவது சீசன் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அதிக போட்டிகளில் விளையாட உள்ளதால், ஸ்பின்னர்கள் மொயின் அலி, ஜடேஜா, தீக்ஷனா ஆகியோர் பட்டைய கிளப்ப அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும், தோனிக்கு அடுத்து கேப்டன் பொறுப்பை ஏற்க பென் ஸ்டோக்ஸும் தயாராக இருக்கிறார். இதனால், கேப்டன் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. இருப்பினும், சிஎஸ்கேவில் தீர்க்கப்படாத மூன்று முக்கிய பிரச்சினைகள் இருக்கிறது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

1.பவர் பிளே, பவர் ஹிட்டர்:

சிஎஸ்கேவில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இணையான பவர் ஹிட்டர் ஓபனர் இல்லை. ருதுராஜ் ஒருபக்கம் அதிரடியாக இன்னிங்ஸை தொடர்ந்தாலும், டிவோன் கான்வே செட்டில் ஆகிவிட்டுதான் அதிரடி காட்ட முற்படுகிறார். இதனால், ருதுராஜுக்கு அழுத்தங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த காரணங்களால்தான், சிஎஸ்கேவால் பவர் பிளேவில் ரன்களை குவிக்க முடியவில்லை.

2.டெத் பேட்டர்கள் பிரச்சினை:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் 17 முதல் 20 ஓவர்களில் 103.4 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ரன்களை சேர்த்தது. தோனி பார்முக்கு திரும்பாதது, ஜடேஜா அழுத்தங்களுடன் விளையாடியது போன்ற காரணங்களால்தான் இப்படி நடந்தது. மேலும், ஷிவம் துபே எப்போதாவது ஒரு போட்டியில்தான் அதிரடியாக செயல்பட்டார். தற்போது பென் ஸ்டோக்ஸ் வந்திருக்கிறார். இருப்பினும், அவர் மிடில் வரிசையில்தான் களமிறங்க வாய்ப்புகள் இருக்கிறது. தோனி, துபே ஆகியோர்தான் பினிஷர் ரோலில் விளையாட வாய்ப்புள்ளது. ஆகையால், அவர்கள் அதிரடி காட்டியாக வேண்டும்.

3.டெத் பௌலர்கள் பிரச்சினை:

தீபக் சஹார் பவர் பிளேவில்தான் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். பென் ஸ்டோக்ஸ் மிடில் ஓவர்களில் அபாரமாக பந்துவீசக் கூடியவர். டெத் ஓவர்களில்தான் பிராவோ இடத்தை நிரப்பத்தான் ஆட்கள் இல்லை. கடந்த சீசனில் டெத் ஓவர்களில், ஓவருக்கு சராசரியாக 11.29 ரன்களை சிஎஸ்கே விட்டுக்கொடுத்தது. இம்முறையும் அதே பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்