ஆப்நகரம்

இலங்கை வீரர்களை தாக்கியவர்கள் சுட்டுக்கொலை !

பாகிஸ்தான் சென்ற போது இலங்கை கிரிக்கெட் வீரர்களை தாக்கிய தீவிரவாதிகள் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

TOI Sports 28 Aug 2016, 3:18 pm
பாகிஸ்தான் சென்ற போது இலங்கை கிரிக்கெட் வீரர்களை தாக்கிய தீவிரவாதிகள் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
Samayam Tamil 4 terrorists involved in 2009 sri lankan cricket team attack shot dead by pak police
இலங்கை வீரர்களை தாக்கியவர்கள் சுட்டுக்கொலை !


கடந்த 2009ல் பாகிஸ்தானில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்றிருந்தனர். அவர்கள் லாகூரில் நடந்த போட்டியில் பங்கேற்க சென்ற போது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 போலீஸார் கொல்லப்பட்டனர்.

இலங்கையின் ஜெயவர்தனா, சங்ககரா, மெண்டிஸ், சமரவீரா, தரங்கா, சமிந்தா வாஸ், ஆகியோர் காயமடைந்தன. இவர்களை தாக்கிய தீவிரவாதிகள் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தற்போது பாகிஸ்தான் சி.ஐ.டி., தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சி.ஐ.டி., அதிகாரி கூறியது:
போலீசார் நடத்திய ரகசிய சோதனையின் போது திடீரென துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் நாய்க் முஹமது, அப்துல் வஹாப், அர்ஷத், அத்தர் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான தாக்குதலிலும், 2008 மூன் மார்கெட் தாக்குதலிலும் முக்கிய பங்கு வகித்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்