ஆப்நகரம்

‘10-ல 8 போட்டிய’…இவரு ஜெயிக்க வச்சுருவாரு: இளம் வீரருக்கு ஜடேஜா பாராட்டு…சூர்யகுமார் யாதவ் கிடையாது!

10-ல் 8 போட்டிகளை இவர் ஜெயிக்க வைத்துவிடுவார் என இளம் வீரரை ஜடேஜா புழந்துள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 9 Jan 2023, 10:52 am
2023ஆம் ஆண்டில், இந்திய அணி தனது முதல் கிரிக்கெட் தொடரை இலங்கைக்கு எதிராக விளையாடியாது. மூன்று போட்டிகள் கொண்ட அந்த டி20 தொடரில் இளம் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
Samayam Tamil இந்திய அணி


இளம் கேப்டன் ஹார்திக் பாண்டியாவின் தலைமையில் ஷிவம் மாவி, அறிமுக வீரராக களமிறங்கி முதல் போட்டியிலேயே 4 போட்டிகளை கைப்பற்றி மேட்ச் வின்னராக இருந்தார். அடுத்து, அக்சர் படேல் ஜடேஜாவின் இடத்தில் களமிறங்கி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் கலக்கி, தொடர் நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல 360 டிகிரியில் விளையாடி, புதுபுது ஷாட்களை ஆடி திணற வைத்து, இரண்டாவது டி20 போட்டியில் அரை சதத்தையும், மூன்றாவது போட்டியில் சதம் அடித்தும் முரட்டு பார்மை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டினார்.

இந்த மூன்று வீரர்களை தவிர்த்து, ஜம்மு எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக் தொடர்ந்து, ஒவ்வொரு பந்திலையும் இலங்கை பேட்டர்களை கதறவிட்டு இத்தொடரில் 7 ஓவர்களை வீசி அதிக விக்கெட்களை (7) கைப்பற்றிய பௌலராக திகழ்கிறார்.

குறிப்பாக, இரண்டாவது டி20 போட்டியின்போது 155 வைகத்தில் பந்துவீசி, இந்திய அணிக்காக அதிவேகத்தில் பந்துவீசிய பௌலர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்து அசத்தினார். இந்நிலையில், உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பேசியுள்ளார்.

அஜய் ஜடேஜா பேட்டி:

அதில், ‘‘இந்திய அணியில் ஜவகல் ஸ்ரீநாத்திற்கு பிறகு, தொடர்ந்து 145 வேகத்தில் பந்துவீச பௌலர் கிடைக்கவில்லை. நீண்ட காலமாக இப்படிப்பட்ட பௌலருக்காக காத்திருந்த இந்திய அணிக்கு தற்போது உம்ரான் மாலிக் கிடைத்துள்ளார். இவரை இந்திய அணி நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 10-ல் 8 போட்டிகளில் இவரால் வெற்றியைப் பெற்றுத்தர முடியும். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு போட்டியிலும் இவரால் 3 விக்கெட்களை எடுக்க முடியும். ஆகையால், மூன்று விதமான அணியிலும் இவரை சேர்த்து, ரெகுலராக வாய்ப்பு வழங்க வேண்டும்” என அஜய் ஜடேஜா கோரிக்கைவிடுத்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்