ஆப்நகரம்

குசும்புகார தமிழர்கள் : மத்திய அரசுக்கு வெளிநாட்டில் எதிர்ப்பு

விண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது, தமிழர் ஒருவர் காட்டிய பதாகை அனைவரையும் குழப்பமடையச் செய்தது.

TOI Sports 26 Jun 2017, 2:41 am
ட்ரினிடாட் : விண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது, தமிழர் ஒருவர் காட்டிய பதாகை அனைவரையும் குழப்பமடையச் செய்தது.
Samayam Tamil a cricket fan shown we eat beef tamilan in india v windies match
குசும்புகார தமிழர்கள் : மத்திய அரசுக்கு வெளிநாட்டில் எதிர்ப்பு


வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் தொடர், ஒரு டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கின்றது. இந்த தொடரின் 2வது ஒருநாள் போட்டி ட்ரினிடாட்டில் நடைப்பெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 43 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விண்டீஸ் அணி விளையாடி வருகின்றது.

மாட்டுக்கறி பதாகை :
கிரிக்கெட் போட்டியை காண செல்லும் ரசிகர்கள் தங்கள் கையில் சிக்ஸர், பவுண்டரிகளுக்கான பதாகையோ, கிரிக்கெட் வீரர்களின் பெயரோ அல்லது புகைப்படத்தையோ பதாகையாக கொண்டு சென்று காட்டுவது வழக்கம்.

ஆனால் இந்த போட்டியை காண வந்திருந்த ஒரு தமிழக ரசிகர், போட்டியின் போது, “WE EAT BEEF - TAMILAN” (நாங்கள் மாட்டுக்கறி சாப்பிடுவோம் - தமிழன்) என்ற பதாகையை காட்டினார்.



மாட்டுக்கறி விவகாரம் இந்தியாவின் பல மாநிலங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸில், ஒரு தமிழர் மாட்டுக்கறி பிரச்னை குறித்து அதுவும் கிரிக்கெட் போட்டியின் போது பதாகையாக காட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்