ஆப்நகரம்

IND VS NZ T20: ‘பாவம்’ இந்த 3 இளம் பேட்ஸ்மேன்கள்…வாய்ப்பு கிடைக்காதாம்: சோப்ரா வருத்தம்!

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் 5 ஓபனர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Samayam Tamil 16 Nov 2021, 7:03 am
இந்தியா, நியூசிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 17ஆம் தேதிமுதல் துவங்கி, ஒருநாள் விட்டு ஒருநாள் நடைபெறவுள்ளது. அடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 25ஆம் தேதி கான்பூரிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பையிலும் துவங்கவுள்ளது.
Samayam Tamil ஆகாஷ் சோப்ரா, இந்திய அணி


இந்நிலையில் டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐபிஎல் 14ஆவது சீசனில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் போன்ற வீரர்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

IND vs NZ T20: இந்திய அணி அறிவிப்பு…கேப்டன் இவர்தான்: இரண்டு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு!

விமர்சகர்கள் கருத்து:

நியூசிலாந்துக்கு எதிரான இந்த டி20 அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து, முன்னாள் வீரர்கள் சிலர் தங்களின் கருத்துகளை, விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, அணித் தேர்வில் இருக்கும் தவறை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“இதுதான் நம் சிஸ்டத்தில் இருக்கும் அடிப்படை தவறு. நான் இதனை வெளிப்படையாகப் பேச விரும்புகிறேன். ஏனெனில், இந்திய அணியின் எதிர்காலம் மிகவும் முக்கியம். ஒருவரை தேர்வுசெய்தால், அவருக்கான இடம் இருந்தால் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். ஓபனரை, ஒன் டவுன் இடத்திற்கு தேர்வு செய்ய கூடாது. இப்போது, நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியை எடுத்துக்கொள்ளுங்கள். ஐபிஎலில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

இந்திய இளம் வீரர்களுக்கு ஆபத்து…கண்டுகொள்ளாமல் இருக்கும் பிசிசிஐ: மேட்ச் இப்போ தேவைதானா?

மேலும், “இது சிறந்த முடிவு. ஆனால், சரியான இடத்திற்கு சரியான வீரர்களை தேர்வு செய்திருக்கிறார்களா எனக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். ஓபனரை 4,5ஆம் இடத்தில் களமிறக்கும் அளவுக்கு அணித் தேர்வு இருக்கிறது. கேப்டன் ரோஹித், துணைக் கேப்டன் ராகுல் இருவரும் ஓபனராக களமிறங்குவது உறுதி. காரணம், இவரும் கேப்டன் பொறுப்பில் இருக்கிறார்கள். அதே ஓபனர்களுக்கான இடங்களில் வெங்கடேஷ் ஐயர், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தேர்வு செய்தது ஏன்? ஒரு பேக்கப் வீரர் மட்டும் போதாதா? ஓபனராக ஆடுவதைப்போல், எல்லா இடங்களிலும் ஒரு பேட்ஸ்மேன் ஆட முடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“3 போட்டிகளுக்கு 5 ஓபனர்களை தேர்வு செய்திருக்கிறோம். எத்தனை பேருக்கு வாய்ப்பு அளிக்க முடியும்? ரோஹித், ராகுல் நிச்சயம் ஆடுவார்கள். பின்பு, எதற்கு 5 ஓபனர்கள்? இது சரியான அணித் தேர்வு கிடையாது” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்