ஜோகானஸ்பர்க்: தென் ஆப்ரிக்க ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து டிவிலியர்ஸ் விலகுவதாக அறிவித்தார்.
தென் ஆப்ரிக்க டெஸ்ட் கேப்டனாக இருந்த டிவிலியர்ஸ், ஒருநாள், டி-20 போட்டிகளில் சாதிக்க, சமீபத்தில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்த வந்த டிவிலியர்ஸ், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரம் தொடர்பாக பல முன்னாள் தென் ஆப்ரிக்க கேப்டன்கள் டிவிலியர்ஸை கடுமையாக விமர்சித்து வந்தனர். விளையாட வேண்டும் அல்லது ஓய்வை அறிவிக்க வேண்டும் என தெரிவித்து வந்த நிலையில், இந்த பிரச்சனைக்கு டிவிலியர்ஸ் தற்போது ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இவர் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். அதே நேரம் எந்த ஒரு விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறவில்லை என்றும் தொடர்ந்து முடிந்த அளவு நாட்டுக்காக விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Looking forward to a great summer #ProteaFire pic.twitter.com/yojybIrvjZ — AB de Villiers (@ABdeVilliers17) August 23, இதுகுறித்து டுவிட்டரில் டிவிலியர்ஸ் வெளியிட்டுள்ள பதிவில்,’கடந்த 12 மாதங்களுக்கு மேலாக என்னவோ பேசப்பட்டு, எழுதப்பட்டு வருகிறது. இதை தெளிவாக்க இதுவே சரியான நேரம் என உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளில் டி-20, டெஸ்ட் போட்டிகளில் சிறந்த கேப்டன் என்பதை டுபிளசி நிரூபித்துள்ளார். அதனால் அவரிடமே ஒருநாள் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க விரும்புகிறேன். அதோடு மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் விளையாட தயாராக உள்ளேன் என்பதை தேர்வுக்குழுவிற்கு தெரிவித்துக்கொள்கிறேன். அணிக்கு எப்போது தேவைப்பட்டாலும் தயாராக இருப்பேன். ஆனால் எத்தனை ரனக்ள், எத்தனை ’கேட்ச்’ பிடிப்பேன் என என்னால் உறுதியளிக்க முடியாது.’ என்றார்.
De Villiers steps down as ODI captain, available for Tests
தென் ஆப்ரிக்க டெஸ்ட் கேப்டனாக இருந்த டிவிலியர்ஸ், ஒருநாள், டி-20 போட்டிகளில் சாதிக்க, சமீபத்தில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்த வந்த டிவிலியர்ஸ், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரம் தொடர்பாக பல முன்னாள் தென் ஆப்ரிக்க கேப்டன்கள் டிவிலியர்ஸை கடுமையாக விமர்சித்து வந்தனர். விளையாட வேண்டும் அல்லது ஓய்வை அறிவிக்க வேண்டும் என தெரிவித்து வந்த நிலையில், இந்த பிரச்சனைக்கு டிவிலியர்ஸ் தற்போது ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இவர் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். அதே நேரம் எந்த ஒரு விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறவில்லை என்றும் தொடர்ந்து முடிந்த அளவு நாட்டுக்காக விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Looking forward to a great summer #ProteaFire pic.twitter.com/yojybIrvjZ — AB de Villiers (@ABdeVilliers17) August 23, இதுகுறித்து டுவிட்டரில் டிவிலியர்ஸ் வெளியிட்டுள்ள பதிவில்,’கடந்த 12 மாதங்களுக்கு மேலாக என்னவோ பேசப்பட்டு, எழுதப்பட்டு வருகிறது. இதை தெளிவாக்க இதுவே சரியான நேரம் என உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளில் டி-20, டெஸ்ட் போட்டிகளில் சிறந்த கேப்டன் என்பதை டுபிளசி நிரூபித்துள்ளார். அதனால் அவரிடமே ஒருநாள் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க விரும்புகிறேன். அதோடு மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் விளையாட தயாராக உள்ளேன் என்பதை தேர்வுக்குழுவிற்கு தெரிவித்துக்கொள்கிறேன். அணிக்கு எப்போது தேவைப்பட்டாலும் தயாராக இருப்பேன். ஆனால் எத்தனை ரனக்ள், எத்தனை ’கேட்ச்’ பிடிப்பேன் என என்னால் உறுதியளிக்க முடியாது.’ என்றார்.
De Villiers steps down as ODI captain, available for Tests