ஆப்நகரம்

TNPL 2019: அபினவ் முகுந்தின் அபாரத்தால் காரைக்குடியை வீழ்த்திய கோவை அணி!

டிஎன்பிஎல் 2019 தொடரின் இன்றைய போட்டியில் காரைக்குடி வீரன் அணியை கோவை கிங்ஸ் அணி8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

Samayam Tamil 21 Jul 2019, 10:45 pm
திண்டுக்கல்: தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 போட்டி தொடரின் 4வது போட்டியில் காஞ்சி கிங்ஸ் அணியை கோவை கிங்ஸ் அபாரமாக வீழ்த்தியுள்ளது.
Samayam Tamil Abhinav Mukund


இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பவுலிங் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன் தொடக்க வீரர்கள் முகிலேஷ் 0 ரன், விஷால் வித்யா 1 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்,

தொடர்ந்து சிறப்பாக ஆடிய காஞ்சி அணிக்கு சுரேஷ் லோகேஷ்வர் 51, அபராஜித் 29, சஞ்சய் யாதவ் 31, ஃப்ரான்ஸிஸ் ரோகின்ஸ் 25 ரன்கள் விளாசினர்.

IND vs WI 2019: வெஸ்ட் இண்டீஸ் தொடர்: பல மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு

குறிப்பாக ரோகின்ஸ் 7 பந்தில் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரி அடித்து 25 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால்
20 ஓவர் முடிவில் காஞ்சி அணி 6 விக்கெட் இழந்து 150 ரன்களை குவித்தனர்.

Telugu Titans: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய அபார வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ்!

கோவை அபார வெற்றி:
தொடர்ந்து ஆடிய கோவை அணிக்கு தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினர்.
ஷாரூக் கான் 21 பந்தில் 40 ரன்கள், அனிருத் சிதா ராம் 22 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரராக களமிறங்கிய அபினவ் முகுந்த் 44 பந்தில் 70 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் கோவை கிங்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த போட்டியில் 70 ரன்கள் விளாசிய அபினவ் முகுந்த் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்