ஆப்நகரம்

அடிலெய்டு தான் என்னை ஆளாக்கியது: விராத் !

ஆஸ்திரேலியாவின் நடந்த அடிலெய்டு டெஸ்ட் போட்டி தான் கேப்டனாக எனக்கு நம்பிக்கை அளித்தது என இந்திய டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி விளக்கம் அளித்துள்ளார்.

TOI Sports 6 Oct 2016, 5:00 pm
புதுடில்லி: ஆஸ்திரேலியாவின் நடந்த அடிலெய்டு டெஸ்ட் போட்டி தான் கேப்டனாக எனக்கு நம்பிக்கை அளித்தது என இந்திய டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி விளக்கம் அளித்துள்ளார்.
Samayam Tamil adelaide test gave me belief that i can lead india kohli
அடிலெய்டு தான் என்னை ஆளாக்கியது: விராத் !


இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி. தற்போது இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான ஏற்கனவே இந்திய அணி 2-0 என கைப்பற்றிவிட்டது. இதனால் இந்திய அணி, டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில், நம்பர்-1 இடத்தை தனது பரம் எதிரியான பாகிஸ்தான் அணியிடம் இருந்து தட்டிப்பறித்தது.

இதன்மூலம் இந்திய கேப்டன் விராத் கோஹ்லிக்கு பல வகையிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் கேப்டனாக செயல்பட்டபோது தான் தனக்கு முழுநம்பிக்கை ஏற்பட்டதாக விராத் கோஹ்லி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது:
ஆஸ்திரேலியாவில் கடந்த 2014ல் அடிலெய்டில் நடந்த டெஸ்டின் போது, இந்திய அணியை வழிநடத்தும் முழுத்திறமை எனக்கு இருப்பதை உணர்ந்தேன். ஆஸ்திரேலிய அணி போட்டியின் நான்காவது நாளிலும் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது இந்திய அணியின் எல்லா வீரர்களிடமும் சென்று எனது திட்டத்தை எடுத்துச்சொன்னேன். அவர்களும் அதை புரிந்து கொண்டு களத்தில் அப்படியே செயல்படுத்தினர். ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இருப்பினும் அப்போது இளம் இந்திய அணியை வழிநடத்த முடியும் என்ற உற்சாகமும் நம்பிக்கையும் எனக்குள் பிறந்தது. அதை என்னால் என்றுமே மறக்க முடியாது.
இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்