ஆப்நகரம்

சச்சின் வழங்கிய பேட் மூலம் உலக சாதனை படைத்த அஃப்ரிதி: சக வீரர் தகவல்!

பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அஃப்ரிதி இலங்கைக்கு எதிரான போட்டியின் போது 37 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனை படைத்திருந்தார். இதற்காகப் பயன்படுத்திய பேட், சச்சின் டெண்டுல்கர் பரிசாக வழங்கியது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Samayam Tamil 3 Aug 2020, 9:34 pm
1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் சதம் விளாசி அச்சாதனையை 18 வருடங்களாக தக்க வைத்திருந்தார். 2014ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் கோரி ஆண்டர்சன் 36 பந்துகளில் சதம் கடந்து அஃப்ரிதியின் சாதனையை முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil afridi and sachin


இந்நிலையில், சச்சின் வழங்கிய பேட் மூலமாகத்தான் அஃப்ரிதி உலக சாதனையை நிகழ்த்தினார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அசார் மேக்மூத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இணைய நிகழ்ச்சி ஒன்றில் அசார் மேக்மூத் விரிவாகப் பேசினார். அதில், வகார் யூனிஸ் வழங்கிய பேட் மூலம் அஃப்ரிதி உலக சாதனை படைத்தார். ஆனால், வகார் யூனிஸ்க்கு அந்த பேட்டை சச்சின் டெண்டுல்கர் பரிசாக வழங்கியிருந்தார் என்று கூறியுள்ளார்.

“1996ஆம் ஆண்டு, சகாரா கோப்பை தொடர் முடிந்தபின்பு, அஃப்ரிதியும் நானும் (அசார் மேக்மூத்) பாகிஸ்தான் அணிக்கு அறிமுகமானோம். முஸ்டேக் அகமது காயத்தால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகியதால், பாகிஸ்தான் ஏ அணியில் இடம்பெற்றிருந்த அஃப்ரிதி அணிக்குள் சேர்க்கப்பட்டார்” எனத் தெரிவித்தார்.

“அந்த காலகட்டத்தில், இலங்கை அணியில் ஜெய சூர்யா மற்றும் களுவிதரணா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி அதிரடியாக விளையாடினார். இலங்கையைப் போல, பாகிஸ்தான் அணியிலும் தொடக்கத்தில் ஒரு அதிரடி ஆட்டக்காரரைக் களமிறக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் முடிவு செய்தது.

“பயிற்சியின் போது, அஃப்ரிதி அதிரடியாக விளையாடி பந்துகளை அனைத்து திசைகளிலும் சிதறடித்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த பயிற்சியாளர், அஃப்ரிதியை 3ஆம் நிலை ஆட்டக்காரராகக் களமிறக்க முடிவு செய்தார்” எனக் கூறினார்.

தோனி ஓய்வு விவகாரம்... ஆஷிஸ் நெஹ்ரா பாய்ச்சல்!

இலங்கைக்கு எதிரான அப்போட்டியில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தபோது அஃப்ரிதி களம் கண்டார். தொடக்க முதலே அதிரடியாக ஆடிய அவர் 11 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளின் உதவியுடன் 37 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனை படைத்தார். ஆனால், அவர் பயன்படுத்தி பேட் சச்சின் டெண்டுல்கர் வழங்கியது என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

“பந்து வீச்சாளராக அறிமுகமான அஃப்ரிதி வகார் யூனிஸ் வழங்கிய பேட் மூலம் அதிரடி சதம் விளாசியதால், அன்று முதல் பேட்ஸ்மனாக மாறிவிட்டார். வகார் யூனிஸ்க்கு சச்சின்தான் அப்பேட்டை பரிசாக வழங்கியிருந்தார் என நினைக்கிறேன். அதன்பின்பு அஃப்ரிதி தனது அசாத்திய திறமையால் அணியில் நிறந்திர இடம் பிடித்து, கேப்டனாகவும் இருந்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

“2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை அஃப்ரிதி சிறப்பாக வழி நடத்தினார். பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் நல்ல முறையில் சோபித்தார். இருப்பினும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி போராடித் தோல்வியடைந்தது” எனக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்