பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடியின் தொண்டு நிறுவனத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தனது பேட் ஒன்றினை பரிசளித்திருக்கிறார்.
அண்மையில், அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கா இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட கோலியின் ஜெர்ஸி ஒன்று பரிசளிக்கப்பட்டது. அந்த ஜெர்ஸி லண்டனில் ஏலம் விடப்பட்டு, ரூ.3 லட்சத்துக்கு விலை போனது.
இப்படி சட்டையைக் கழற்றிக்கொடுத்த கோலி தன் மட்டையையும் இப்போது வாரி வழங்கியுள்ளார். இந்த முறை தன் பேட்டைக் கொடுத்த விராட் கோலிக்கு ஷாகித் அப்ரிடி நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒற்றை வெளியிட்டார். "உங்களைப் போல நண்பர்களும் ஆதரவாளர்களும் அளிக்கும் உதவியுடன் தொண்டு நிறுவனத்தின் பணி எல்லோருக்கும் பயன்படும்" என்று அப்ரிடி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி பரிசாக கொடுத்திருக்கும் பேட்டில் கோலியில் கையெழுத்தும் உள்ளது. அந்த பேட்டின் புகைப்படத்தையும் அப்ரிடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த கோலி, அப்ரிடி தொண்டு நிறுவனத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்மையில், அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கா இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட கோலியின் ஜெர்ஸி ஒன்று பரிசளிக்கப்பட்டது. அந்த ஜெர்ஸி லண்டனில் ஏலம் விடப்பட்டு, ரூ.3 லட்சத்துக்கு விலை போனது.
இப்படி சட்டையைக் கழற்றிக்கொடுத்த கோலி தன் மட்டையையும் இப்போது வாரி வழங்கியுள்ளார். இந்த முறை தன் பேட்டைக் கொடுத்த விராட் கோலிக்கு ஷாகித் அப்ரிடி நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒற்றை வெளியிட்டார். "உங்களைப் போல நண்பர்களும் ஆதரவாளர்களும் அளிக்கும் உதவியுடன் தொண்டு நிறுவனத்தின் பணி எல்லோருக்கும் பயன்படும்" என்று அப்ரிடி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி பரிசாக கொடுத்திருக்கும் பேட்டில் கோலியில் கையெழுத்தும் உள்ளது. அந்த பேட்டின் புகைப்படத்தையும் அப்ரிடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த கோலி, அப்ரிடி தொண்டு நிறுவனத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.