ஆப்நகரம்

IND vs BAN 2nd Test:பந்தை தண்ணீரில் முக்கி பயிற்சியில் ஈடுபடும் வங்கதேச பவுலர்கள் : கனவு காணும் ரஹானே.....

கொல்கத்தா: வரலாற்று சிறப்புமிக்க முதல் பகலிரவு டெஸ்டில் பங்கேற்பது குறித்து கனவு காண்பதாக இந்திய துணைக்கேப்டன் அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Nov 2019, 2:59 pm
இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொல்கத்தாவில் வரும் 22ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil Ajinkya Rahane


முதல் ஆளாக...
இந்த டெஸ்டில் பங்கேற்கயிருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணைக்கேப்டன் அஜிங்கிய ரஹானே ஆகியோர் இன்று காலை கொல்கத்தா சென்றடைந்தனர்.

சிஎஸ்கேவில் சாம் பில்லிங்ஸை எதுக்கு எடுத்தீங்க? எதுக்கு தூக்குனீங்க?

கனவு காணும் ரஹானே
இந்த வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது குறித்து கனவு கண்டுவருவதாக ரஹானே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஹானே வெளியிட்டுள்ள பதிவில்,‘ஏற்கனவே வரலாற்று சிறப்புமிக்க பிங்க் பால் டெஸ்ட் குறித்து கனவு காண துவங்கிவிட்டேன்’ என குறிப்பிட்டுள்ளார்.


இந்தியா 300
இந்தூரில் நடந்த முதல் டெஸ்டில், வங்கதேச அணியை, இந்திய அணி இன்னிங்ஸ் & 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 300 புள்ளிகள் பெற்று மற்ற அணிகள் எட்டமுடியாத உச்சத்தில் உள்ளது. மேலும் பங்கேற்ற எல்லா டெஸ்டில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியது.

தண்ணீரில்
இது ஒருபுறம் இருக்க, வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள், பந்தை தண்ணீரில் முக்கி பயிற்சியில் ஈடுபவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மைதானத்தில் நிலவும் ஈரப்பதன் இப்போட்டியில் முக்கியபங்கு வகிக்கும் என்பதால் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்