ஆப்நகரம்

குடும்ப வன்முறை வழக்கில் இருந்து பின்வாங்கிய யுவராஜ் சகோதரர் மனைவி...!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக அளித்த புகாருக்காக அவரின் சகோதரரின் மனைவி மன்னிப்பு கோரியுள்ளார்.

Samayam Tamil 12 Sep 2019, 6:25 am
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அவரின் குடும்பத்தினர் மீது, அவரின் சகோதர் ஜோராவர் சிங்கின் மனைவி அகன்ஷா ஷர்மா கடந்த 2017, அக்டோபர் மாதம் குடும்ப வன்முறை புகார் அளித்திருந்தார்.
Samayam Tamil Yuvraj Singh


அதில் யுவராஜ் சிங் மற்றும் அவரின் குடும்பத்தார் தன்னை குடும்ப வன்முறை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அதற்காக அகன்ஷா ஷர்மா மன்னிப்பு கோரியுள்ளார். இதையடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

ஆறு மாத வாழ்க்கை
ஜோராவர் சிங், அகன்ஷா ஷர்மாவின் குடும்ப வாழ்க்கை வெறும் 6 மாதங்கள் மட்டுமே நீடித்தது. இதன் பின் பிரிந்து வாழ்ந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை, 4 ஆண்டு வழக்கிறகு பின் சமீபத்தில் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

வேறு வழியில்ல....
இதுகுறித்து யுவராஜ் சிங் குடும்பத்தார் கூறுகையில், ‘சட்டத்தில் தப்பிச்செல்ல எவ்வித வழியும் இல்லாத காரணத்தால் வேறு வழியில்லாமல் அகன்ஷா ஷர்மா மன்னிப்பு கேட்டு வழக்கை திரும்ப பெற்றுள்ளார்.

கோடி நெஞ்சங்கள்...
கோடிக்கணக்கான நெஞ்சங்களில் இடம் பெற்றுள்ள புகழ்மிக்க யுவராஜ் சிங்கின் குடும்பத்தார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார்.


பெருமை....
தற்போது யுவராஜ் சிங்கை நினைக்கும் போது மீண்டும் பெருமையாக உள்ளது. கடவுள் மீதும் இந்திய நாட்டின் சிறந்த சட்டத்தின் மீதும் நம்பிக்கை வைத்து எதிர்த்து போராடுவது எப்படி என நிரூபித்துள்ளார்.’ என குறிப்பிட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்