ஆப்நகரம்

அடம்பிடித்து நினைத்ததை சாதித்த கோலி: தெறித்து ஓடும் கும்ளே!

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் பதவி விலக இந்திய பயிற்சியாளர் அனில் கும்ளே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TOI Sports 18 Jun 2017, 12:44 pm
லண்டன்: இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் பதவி விலக இந்திய பயிற்சியாளர் அனில் கும்ளே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil anil kumble set to quit as team india coach
அடம்பிடித்து நினைத்ததை சாதித்த கோலி: தெறித்து ஓடும் கும்ளே!


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சர்வதேச தரவரிசையில் ‘டாப் -8’ இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ளது.

இத்தொடர் துவங்கியது முதல், பயிற்சியாளர் கும்ளே, இந்திய கேப்டன் விராட் கோலி இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. நாளுக்கு நாள் பெரிதான இவர்களின் கருத்து சண்டையால், அணியில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.

இதையடுத்து இவர்களின் பிரச்சனைக்கு முடிவுகட்ட பிசிசிஐ., கேப்டன் கோலியை, பயிற்சியாளர் கும்ளேவுடன் ஒத்துழைப்பு அளிக்கும்படி எச்சரித்தது. ஆனால், இதில் கும்ளேவுக்கு உடன்பாடு இல்லை என தெரிகிறது.

தவிர, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பைனலுக்கு முன்னேறிய பின் கருத்து தெரிவித்த கேப்டன் கோலி, வெற்றி தனிநபருக்கு சொந்தமல்ல, பேட்டிங் சிறப்பாக இருப்பதற்கு பேட்டிங் பயிற்சியாளர் பாங்கர் தான் காரணம் என வெளிப்படையாகவே தெரிவித்தார். தவிர, பயிற்சியின் போது, மணிக்கணக்கில் தனது பேட்டிங்கிற்கு கைவலிக்க வலிக்க பவுலிங் செய்தது பாங்கர் தான் என தெரிவித்தார்.

இதனால், கும்ளே இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் விடைபெற திட்டமிட்டுள்ளதாக, பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இந்திய அணி பயிற்சியாளர் இல்லாமல் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Anil Kumble’s tenure with Team India might have been extended for one more series but the India head coach is unlikely to continue for long.

அடுத்த செய்தி

டிரெண்டிங்