ஆப்நகரம்

ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ராவுக்கு சி.கே நாயுடு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது!

புதுடெல்லி: முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், மற்றும் அஞ்சும் சோப்ரா ஆகியோருக்கு சி.கே நாயுடு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்படவுள்ளது.

Samayam Tamil 27 Dec 2019, 10:13 pm
பிசிசிஐ வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதான சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது, இந்தாண்டில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், மற்றும் அஞ்சும் சோப்ரா ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Kris Srikkanth


ஜனவரி 12ல் விருது
பிசிசிஐயிம் ஆண்டுக்கூட்டம் வரும் ஜனவரி 12ஆம் தேதி மும்பையில் நடக்கிறது. இதில் இந்த விருதுகள் வழங்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக ஸ்ரீகாந்த் மற்றும் அஞ்சும் சோப்ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. பிசிசிஐயில் உள்ள அனைவருமே இவர்கள் தான் இவ்விருதுக்கு சரியான தேர்வாக உணர்ந்தனர்” என்றார்.

தமிழக வீரர்
இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 1981 முதல் 1992 வரை தமிழகத்தின் ஸ்ரீகாந்த் விளையாடியுள்ளார். மேலும் கடந்த 1983இல் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் ஸ்ரீகாந்த் இடம் பெற்றிருந்தார். இவர் இந்திய அணிக்காக 43 டெஸ்டில் பங்கேற்று 2 சதங்கள், 12 அரைசதங்கள் உட்பட 2062 ரன்கள் அடித்துள்ளார்.

அசத்தல் ஆட்டம்
1983 உலகக்கோப்பை கிரிக்கெட் ஃபைனலில் மால்கம் மார்சல், ஜியோல் கார்னர், ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங் உள்ளிட்டோரை சமாளித்து 38 ரன்கள் அடித்து அசத்தினார் ஸ்ரீகாந்த். தொடர்ந்து 1985இல் நடந்த பென்சன் ஹெட்ஜ்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடரின் ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் அடித்து அசத்தினார்.

கேப்டன் பொறுப்பு
இதையடுத்து 1989இல் ஜாம்பவான் சச்சின் அறிமுகமான பாகிஸ்தான் சென்ற இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த தொடர் சமனில் முடிய ஸ்ரீகாந்த் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 1992இல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடருடன் ஸ்ரீகாந்த் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 2011இல் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக்குழுவில் ஸ்ரீகாந்த் இடம் பெற்றிருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்