ஆப்நகரம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புகைப்படத்தில் அனுஷ்காவுக்கு என்ன வேலை? - வறுத்தெடுக்கும் நெட்டிஷன்கள்

இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு, இந்திய தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. அப்போது எடுக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படத்தில், விராட் கோலியின் மனைவிக்கு என்ன வேலை என நெட்டிஷன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Samayam Tamil 8 Aug 2018, 10:48 pm
இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு, இந்திய தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. அப்போது எடுக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படத்தில், விராட் கோலியின் மனைவிக்கு என்ன வேலை என நெட்டிஷன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Samayam Tamil virat kohli anushka sharma


இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 டி20 போட்டிகள் , 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து தொடரின் 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

இந்திய தூதரகத்தில் இந்திய அணி:
இந்திய தூதரகத்திற்கு இந்திய அணி வீரர்களை அழைத்து கெளரவித்தனர். இந்த விருந்தில் கலந்து கொண்ட இந்திய அணி வீரர்களுடன், கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் கலந்து கொண்டார்.

பிசிசிஐ சார்பாக எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான புகைப்படத்தில் முதல் வரிசையில் கோலியுடன் அனுஷ்கா சர்மா நின்றுள்ளார்.

அதே சமயம் இந்திய கிரிக்கெட் துணை கேப்டன் ரஹானே கடைசி வரிசையில் புகைப்படத்தில் தெரியுமோ, தெரியாதோ என்ற மாதிரி நிற்கிறார்.



இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் பிசிசிஐ.,யின் செயலை விமர்சித்து வருகின்றனர்.




அடுத்த செய்தி

டிரெண்டிங்