ஆப்நகரம்

நாம ஒன்னு நெனச்சா,வேற ஒன்னு நடக்குது : கோலியுடன் செல்பி எடுத்த தொகுப்பாளர் புலம்பல்

ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் கிரிக்கெட் போட்டி தொகுப்பாளர், வீரர்களிடம் பேட்டி எடுத்தல் போன்ற வேலைகள் உள்ளன. இதில் தற்போது எங்களாலும் முடியும் என இணைந்திருப்பவர் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா விஜயா.

TOI Sports 4 May 2017, 9:35 pm
ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் கிரிக்கெட் போட்டி தொகுப்பாளர், வீரர்களிடம் பேட்டி எடுத்தல் போன்ற வேலைகள் உள்ளன. இதில் தற்போது எங்களாலும் முடியும் என இணைந்திருப்பவர் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா விஜயா.
Samayam Tamil archana vijaya reacts to viral photo with virat kohli poor guy was looking at the cue card
நாம ஒன்னு நெனச்சா,வேற ஒன்னு நடக்குது : கோலியுடன் செல்பி எடுத்த தொகுப்பாளர் புலம்பல்


இவர் ஐபிஎல் போட்டியின் போது வீரர்களை பேட்டி எடுத்தல், போட்டி தொடங்குவதற்கு முன் வீரர்கள் எப்படி தயாராகுக்கின்றனர் போன்ற விபரத்தை அவர்களிடம் பேட்டி எடுத்து வழங்கி வருகின்றார்.

இந்த வகையில் பெங்களூரு அணி கேப்டன் கோலியின் உடற்பயிற்சி குறித்து பேட்டி எடுத்தார் அர்ச்சனா. அப்போது கோலியுடன் இணைந்து ஒரு செல்பி எடுத்துக்கொண்டார். அதோடு, கோலியை பேட்டி எடுப்பது போன்ற புகைப்படமும் எடுக்கப்பட்டது.





இந்த இரண்டு படத்தையும் சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியவர், கோலியுடன் எடுத்த செல்பி வைரலாகும் என எதிர்பார்த்தார். ஆனால் அவர் கோலியை பேட்டி எடுப்பது போன்ற படம் வைரலானது. அதோடு கோலி, அர்ச்சனா குறித்து பேசப்பட்டால் கூட பரவாயில்லை. அர்ச்சனா அணிந்திருந்த கிழிந்த பேஷன் ஜீன்ஸ் பேண்ட் குறித்து தான் அதிகம் பேச்சு எழுந்தது.

இதனால் தொகுப்பாளர் அர்ச்சனா கடும் கோபத்தில் உள்ளார். அதோடு நாம ஒன்னு நெனச்சா, மக்கள் ஒன்னு நெனக்கிறாங்க என புலம்பி தவிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்