ஆப்நகரம்

அர்ஜூனின் முதல் விக்கெடை சச்சினை விட ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடிய வினோத் காம்ப்ளி

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் சர்வதேச விக்கெட்டை இலங்கைக்கு எதிராக வீழ்த்தினார். இதை வினோத் காம்ப்ளி ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டி உள்ளார்.

Samayam Tamil 17 Jul 2018, 8:00 pm
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் சர்வதேச விக்கெட்டை இலங்கைக்கு எதிராக வீழ்த்தினார். இதை வினோத் காம்ப்ளி ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டி உள்ளார்.
Samayam Tamil arjun-tendulkar


முதல் சர்வதேச விக்கெட் :
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தற்போது இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்று 4 நாட்கள் நடைப்பெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றார்.

கொழும்புவில் நடைப்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை அணிக்கு எதிராக, இளம் இந்திய அணி விளையாடி வருகின்றது. இதில் இடம்பெற்றுள்ள அர்ஜூன் டெண்டுல்கர் தனது முதல் சர்வதேச விக்கெட்டை ஆர்.வி.பி.கே மிஸ்ராவை அவுட்டாக்கி இன்று எடுத்தார்.


வினோத் காம்ப்ளி ஆனந்தக் கண்ணீர் :
அர்ஜூனின் இந்த விக்கெட்டை சச்சினின் பள்ளிப்பருவ நண்பரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளி ஆனந்த கண்ணீருடன் பாராட்டியுள்ளார்.


இதுகுறித்து அவரின் டுவிட்டரில் “இது அர்ஜூனின் தொடக்கம் தான், இனி பவுலின், பேட்டிங் என சர்வதேச போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைக்கும் நாள் வரும். தற்போது அவர் வீழ்த்தியுள்ள சர்வதேச முதல் விக்கெட்டை ஆனந்த கண்ணீருடன் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்