ஆப்நகரம்

இலங்கை கிரிக்கெட் வீரர் ஜாமினில் விடுவிப்பு..!

கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் நுவான் குலசேகரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 20 Sep 2016, 12:05 pm
கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் நுவான் குலசேகரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil arrested nuwan kulasekara released on bail
இலங்கை கிரிக்கெட் வீரர் ஜாமினில் விடுவிப்பு..!


இலங்கையின் கண்டி நகரிலிருந்து தலைநகரான கொழும்புவிற்கு சென்று கொண்டிருந்த நுவான் குலசேகரவின் கார் மீது,எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து தொடர்பாக குலசேகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்,தான் அந்த விபத்தை ஏற்படுத்தவில்லை எனவும் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்தான் தன் காரில் மோதியதாகவும் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

சமீபத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நுவான் குலசேகர,இலங்கை அணிக்கான ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் அணிக்காக விளையாடி வருகிறார்,

அடுத்த செய்தி

டிரெண்டிங்