பிரிஸ்பேன்: முதல் ஆஷஸ் டெஸ்டில், இங்கிலாந்தின் மொயின் அலி, பிராட் அவுட்டான முறைகள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாரம் பரிய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் நடக்கிறது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்து 7 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு, கேப்டன் ஜோ ரூட் (51), மொயின் அலி (40), பேரிஸ்டோவ் (42) ஆகியோர் மட்டும் கைகொடுக்க இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 170 ரன்கள் இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டார்க், ஹசில்வுட், லியான் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
😡 pic.twitter.com/yzEK0LkEcq — England's Barmy Army (@TheBarmyArmy) November 26, 2017 That decision. pic.twitter.com/bXOgzrtVgH — England's Barmy Army (@TheBarmyArmy) November 26, 2017 இந்நிலையில் லியான் பந்தில் மொயின் அலிக்கு , ஆஸ்திரேலிய கீப்பர் பெயின் ஸ்டெம்பிங் முறையில் அவுட் கேட்டார். இதை மூன்றாவது அம்பயரிடம் களத்தில் நின்ற அம்பயர் ரெபர் செய்தார்.
அதில் மொயின் அலி, கோட்டின் மீது கால் வைத்தது தெரிந்தது. சந்தேகத்துக்கு இடமான முடிவு எப்போதும் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக வழங்குவதே வழக்கம், ஆனால் மூன்றாவது அம்பயர் அவுட் என அறிவிக்க, இங்கிலாந்தின் புகழ் பெற்ற பார்மி ஆர்மி ரசிகர்கள் இந்த முடிவை மிகவும் கீழ் தரமான முடிவு (ஷோடி -லைன்) என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதே போல மற்றொரு இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட், ஸ்டார்க் வேகத்தில் கேட்ச் முறையில் அவுட்டானார். இதையும் ஹாட்-ஸ்பாட் முறையில் ஆய்வு செய்த மூன்றாவது அம்பயர், அதில் பந்து பேட்டில் பட்டதற்கான எந்த அடையாளமும் தெளிவாக தெரியவில்லை.
ஆனால் அல்ட்ரா எட்ஜ் முறையில் பார்த்த போது, அதில் பந்து பேட்டில் பட்டதாக மிகப்பெரிய அளவு அடையாளம் தெரிந்தது. இந்த முடிவும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாரம் பரிய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் நடக்கிறது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்து 7 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு, கேப்டன் ஜோ ரூட் (51), மொயின் அலி (40), பேரிஸ்டோவ் (42) ஆகியோர் மட்டும் கைகொடுக்க இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 170 ரன்கள் இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டார்க், ஹசில்வுட், லியான் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
😡 pic.twitter.com/yzEK0LkEcq — England's Barmy Army (@TheBarmyArmy) November 26, 2017 That decision. pic.twitter.com/bXOgzrtVgH — England's Barmy Army (@TheBarmyArmy) November 26, 2017 இந்நிலையில் லியான் பந்தில் மொயின் அலிக்கு , ஆஸ்திரேலிய கீப்பர் பெயின் ஸ்டெம்பிங் முறையில் அவுட் கேட்டார். இதை மூன்றாவது அம்பயரிடம் களத்தில் நின்ற அம்பயர் ரெபர் செய்தார்.
அதில் மொயின் அலி, கோட்டின் மீது கால் வைத்தது தெரிந்தது. சந்தேகத்துக்கு இடமான முடிவு எப்போதும் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக வழங்குவதே வழக்கம், ஆனால் மூன்றாவது அம்பயர் அவுட் என அறிவிக்க, இங்கிலாந்தின் புகழ் பெற்ற பார்மி ஆர்மி ரசிகர்கள் இந்த முடிவை மிகவும் கீழ் தரமான முடிவு (ஷோடி -லைன்) என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதே போல மற்றொரு இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட், ஸ்டார்க் வேகத்தில் கேட்ச் முறையில் அவுட்டானார். இதையும் ஹாட்-ஸ்பாட் முறையில் ஆய்வு செய்த மூன்றாவது அம்பயர், அதில் பந்து பேட்டில் பட்டதற்கான எந்த அடையாளமும் தெளிவாக தெரியவில்லை.
ஆனால் அல்ட்ரா எட்ஜ் முறையில் பார்த்த போது, அதில் பந்து பேட்டில் பட்டதாக மிகப்பெரிய அளவு அடையாளம் தெரிந்தது. இந்த முடிவும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.