ஆப்நகரம்

ஐந்து சதம்... 20 விக்கெட், எளிதாக இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போடியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதித்துள்ளது.

TOI Sports 27 Nov 2017, 1:28 pm
நாக்பூர் : இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போடியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதித்துள்ளது.
Samayam Tamil ashwin bags 300 as india take series lead
ஐந்து சதம்... 20 விக்கெட், எளிதாக இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா


இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்தது. இதன் 2வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைப்பெற்றது.

5 சதம் அடித்த இந்தியா :
முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி, பவுலிங்கிலும் சொதப்பியது.

இந்தியாவின் முரளி விஜய் 128, புஜாரா 143, கோலி 213, ரோகித் சர்மா 102 என மொத்தம் 5 சதம் அடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா 6விக்கெட்டுக்கு 610 ரன்கள் எடுத்து டிக்லெர் செய்தது.

பவுலிங் அசத்தல் :
405 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து வெறும் 166 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை சந்தித்தது.

மேலும் படிக்க : ​ ஒதுக்க நினைத்தால் வீருகொண்டு எழும் அஸ்வின் : வேகமாக 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை

அஸ்வின் சாதனை :
2வது டெஸ்டில் 8 (4+4) விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 300 விக்கெட்டுகள் (54 போட்டி) வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
2வது இன்னிங்ஸில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், இசாந்த் சர்மா, ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 213 ரன்கள் விளாசிய கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்