ஆப்நகரம்

அஸ்வின்தான் பெஸ்ட்: தன்னை மறந்து புகழ்ந்த முரளிதரன்

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்று இலங்கை அணி ஜாம்பவான் முத்தைய்யா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

TNN 28 Nov 2017, 6:10 pm
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்று இலங்கை அணி ஜாம்பவான் முத்தைய்யா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ashwin is currently the best spinner in the world says murali
அஸ்வின்தான் பெஸ்ட்: தன்னை மறந்து புகழ்ந்த முரளிதரன்


இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்குப் பின் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளிலும் பங்கேற்க உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி டிராவான நிலையில் நாக்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட்டுகளை அள்ளினார் அஸ்வின். ஆட்டத்தின் கடைசி விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த போட்டிகளில் (54) 300 விக்கெட்டுகளைக் கைப்ப்ற்றிய சாதனையை வசப்படுத்தினார்.



இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 113 போட்டிகளில் 800 விக்கெட்டுகளைக் குவித்தவருமான முரளிதரன் அஸ்வினை வெகுவாகப் பாராட்டியுள்ளார். "அஸ்வினுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 300 விக்கெட்டுகளை வீழ்த்துவது எளிமையானது அல்ல. அவர்தான் இப்போது உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர். ஒருநாள் போட்டிகளில் இடம்பெறாமல் இருக்கும் அவர் விரைவில் ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் இடம்பெற்று சாதனைகளை பல புரிய வேண்டும்" என்று முரளி வாழ்த்தியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்