ஆப்நகரம்

இந்தியாவுக்கு வலுசேர்க்கும் அஸ்வின், ஜயந்த் யாதவ்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளான இன்று உணவு இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் சேர்த்துள்ளது.

TOI Sports 18 Nov 2016, 12:09 pm
விசாகப்பட்டிணம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளான இன்று உணவு இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் சேர்த்துள்ளது.
Samayam Tamil ashwin key after moeens triple strike
இந்தியாவுக்கு வலுசேர்க்கும் அஸ்வின், ஜயந்த் யாதவ்


2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 311 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 151, அஸ்வின் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
இன்று தொடர்ந்து 2வது நாள் ஆட்டத்தை இந்தியா சிறப்பாக தொடக்கியது. வேகப்பந்தை கோலி, அஸ்வின் சிறப்பாக எதிர்க் கொண்டனர். ஆனால் மோயின் அலியின் சுழலில் இந்தியா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் சரிந்தது.

மோயின் அலியின் சுழலில் அஸ்வின் சிக்கினார் ஆனால் அவரின் கேட்சை பென் ஸ்டோக் தவறவிட்டார். ஆனால் அடுத்த பந்திலேயே கோலி அதே பென் ஸ்டோக்கிடம் கேட்ச் கொடுத்து 167 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

அதன் பின் வந்த சஹா 3, ஜடேஜா 0 என அதிக நேரம் நீடிக்கவில்லை. அவர்களும் மோயின் அலியின் சுழலில் எல்.பி.டபில்யூ முறையில் அவுடாகி வெளியேறினர்.

அதன் பின் வந்த ஜெயந்த் யாதவ் மற்றும் அஸ்வின் சிறப்பாக விளையாடி இந்திய அணி ஸ்கோரை 400 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றுள்ளனர்.

முதல் உணவு இடைவேளையில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்