ஆப்நகரம்

இவங்க ரெண்டு பேரும் காயத்தால் நீக்கம்....: மீண்டும் ஒருநாள் அணியில் ரவிந்திர ஜடேஜா!

இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து, அக்‌ஷர் படேல், சார்துல் தாகூர் ஆகியோர் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Samayam Tamil 20 Sep 2018, 3:31 pm
துபாய்: இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து, அக்‌ஷர் படேல், சார்துல் தாகூர் ஆகியோர் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.
Samayam Tamil asia cup 2018 hardik axar and shardul ruled out chahar jadeja and kaul to join team in dubai
இவங்க ரெண்டு பேரும் காயத்தால் நீக்கம்....: மீண்டும் ஒருநாள் அணியில் ரவிந்திர ஜடேஜா!


ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி துபாயில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேறது. இலங்கை, ஹாங் காங் அணிகள் வெளியேற, மற்ற அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு அண்டுக்கு பின் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடி, கடந்த ஆண்டில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்தது.

சுருண்டு விழுந்த பாண்டியா...
இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த பாண்டியா ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு....
இந்நிலையில் பாண்டியா காயமடைந்ததால், ராஜஸ்தானின் வேகப்பந்துவீச்சாலர் தீபக் சகாரை மாற்று வீரராக இந்திய அணி தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தவிர, அக்‌ஷர் படேல், சார்துல் தாகூர் ஆகியோர் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு மாற்று வீரர்களாக ரவிந்திர ஜடேஜா, சித்தார்த் கவுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மாலை துபாய் சென்றடைந்து இந்திய அணியுடன் இணையவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்