ஆப்நகரம்

பாக்.,கை பதற வச்ச முஷ்பிகுர்.... பட்டைய கிளப்பிய வங்கதேசம்: பாக்., அணிக்கு 240 ரன்கள் இலக்கு!

அபுதாபி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் போட்டியில், வங்கதேச அணி 48.5 ஓவரில் 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Samayam Tamil 26 Sep 2018, 8:54 pm
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரகத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேறது. இலங்கை, ஹாங் காங் அணிகள் வெளியேற, மற்ற அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றது.
Samayam Tamil 7


ஃபைனல் வாய்ப்பு யாருக்கு?
இதில் ‘சூப்பர் ஃபோர்’ சூற்றின் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, வங்கதேச அணியை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
மிரட்டிய முஷ்பிகுர்...
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு, முஷ்பிகுர் (99) சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். மிதுன் (60) அரைசதம் அடித்து கைகொடுக்க, வங்கதேச அணி 48.5 ஓவரில் 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்