ஆப்நகரம்

Shoaib Malik:போட்டியில இதெல்லாம் சகஜம்... கதறி அழுத அஃப்தப் அலாமை தேற்றிய சோயிப் மாலிக்

தோல்வியால் கதறி அழுத அஃப்தப் அலாமை சோயிப் மாலிக் கட்டியணைத்து தேற்றினார்.

Samayam Tamil 22 Sep 2018, 7:44 pm
ஐக்கிய அரபு நாட்டின் துபாய், அபுதாபியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று நடைப்பெற்று வருகின்றது.
Samayam Tamil alam

நேற்று நடந்த முதல் சூப்பர் 4 போட்டியில் இந்தியா, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது.

பாகிஸ்தான் போராடி வெற்றி:

மற்றொரு சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானை போராடி வெற்றி பெற்றது.

ஆட்டம் காட்டிய ஸ்பின்னர்கள்:
இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கான் 257 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் இலக்கை எட்ட கடுமையாக போராட வேண்டி இருந்தது.

ஆப்கானின் ரசித் கான், முஜீப், நபி ஆகியோரின் சுழல் பவுலர்கள் பட்டையை கிளப்பினர். சுழலில் பாகிஸ்தான் தடுமாறினாலும், வேகப்பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை பதம் பார்த்தனர்.

வேகப்பந்து வீச்சாளர்களான அஃப்தப் அலாம் 9.3 ஓவருக்கு 64 ரன்களும், குலாபின் நபி 10 ஓவரில் 61 ரன்னும் விட்டுக் கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் 49.3வது ஓவரில் வெற்றி பெற்றது.


கதறி அழுத அலாம்:
பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து அதிக ரன்கள் விட்டுக் கொடுத்ததாக அஃப்தப் அலாம் மைதானத்திலேயே கதறி அழுதார். தன் சட்டையால் முகத்தை மூடி அழுகையை அடக்க முயன்றார்.



அவரை பாகிஸ்தானின் வெற்றிக்கு உதவிய வீரர் சோயிப் மாலிக் கட்டித் தழுவி ஆறுதல் கூறினார். இந்த வீடியோ தற்போது இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களாலும் பாராட்டுதலுக்குரியதாக அமைந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்